tamilnadu

போரால் கொழிக்கும் அமெரிக்கா பெட்ரோல் இருப்பை காசாக்குகிறது

வாஷிங்டன், மார்ச் 7- ரஷ்யா-உக்ரைன் போரால் உச் சத்தை அடைந்துள்ள பெட்ரோல் விலையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள அமெரிக்கா முனைந் துள்ளது. போரைக் காரணம் காட்டி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு கள் விலையைக் கடுமையாக உயர்த்தி யுள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை எகிறி யுள்ளது. சர்வதேச விலைகள் மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள கூடுதல் கச்சா எண்ணெய் சந்தையில் புழங்க முயற்சிகள் நடக்கின்றன. இது குறித்து சர்வதேச எரிபொருள் முகமை சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சந்தையில் 6 கோடி பீப்பாய் எண் ணெய் வருவதற்கான உறுதிமொழி யை முகமை அளித்துள்ளது.  6 கோடி பீப்பாய் எண்ணெய் சந் தைக்குள் வருவதால் சர்வதேசச் சந்தை யில் 106 டாலர் அளவிற்கு எகிறி யுள்ள விலையை நிலைப்படுத்த முடி யும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந் நிலையில் அமெரிக்கா தனது இருப்பில் உள்ள எண்ணெய் வளத்தில் ஒரு பகு தியை சந்தையில் இறக்கப் போகிறது. விலை எகிறியுள்ள நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.  அமெரிக்காவின் வசம் 60 கோடி பீப்பாய் எண்ணெய் உள்ளது. இது  அந்நாட்டின் பல பகுதிகளில் பெரிய, பெரிய குகைகளில் தேக்கி வைக்கப் பட்டுள்ளன. இவ்வளவு இருப்பை எப் போதும் வைத்திருக்க 1975 ஆம் ஆண்டில் அமெரிக்கா முடிவெடுத் தது. அரபு நாடுகள் எண்ணெய் ஏற்று மதி செய்வதில் தடைகள் விதிக்கப்பட்ட தால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இத னால் எண்ணெய் இருப்பு வைக்கப்பட் டது. தற்போது இந்த இருப்பிலிருந்து எண்ணெய் எடுத்து கொழுத்த லாபத்தை ஈட்ட முடிவு செய்திருக்கி றார்கள். எண்ணெய் விநியோகம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இருப்பிலிருந்து எண்ணெய் எடுக்கி றோம் என்று அமெரிக்கா விளக்கம ளித்துள்ளது. இருப்பினும் விலை 106 டாலரைத் தொட்டவுடன் விநியோ கம் செய்யவிருப்பது அமெரிக்காவின் வருமானம் ஈட்டும் உத்தியை அம்ப லப்படுத்துகிறது. எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றிற்காக ரஷ்யாவை நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் தலையின் மீதுதான் தனது இருப்பிலிருந்து எடுக்கும் எரி பொருளை அமெரிக்கா கட்டப்போகி றது.