திருநெல்வேலி, மே 26-நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவிக்கு மேல்பகுதியில் மாஞ்சோலையில் தனியார் தேயிலை தோட்டம்உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். தற்போது கோடை காலத்தை முன்னிட்டு, அங்குதேயிலை உற்பத்தி குறைந்ததால், அந்த தொழிலாளர்களை வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத் துக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர்.இதற்காக சனிக்கிழமை மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்கள் 2 வேன்களில்வால்பாறைக்கு புறப்பட்டனர். மாஞ்சோலை அருகேமூணுமுடங்கு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு வேன் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில்கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மற்றொரு வேனில் மாஞ்சோலையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.