tamilnadu

img

தொழிலாளர்கள் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்

தொழிலாளர்கள் விரோத சட்டங்களை  ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் 

அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

 விரோத 4 சட்ட தொகுப்புக்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 2), அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சோழவரம் காரனோடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில்வே, வங்கி, காப்பீடு, துறை முகங்கள், பாதுகாப்புத்துறை ஆகிய வற்றை தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்த பட்சம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்,  சமவேலைக்கு சம ஊதி யம் வழங்க வேண்டும், சிறு, குறு தொழிலை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. ஏஐசிசிடியு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஜானகிராமன் தலைமையில் சிஐடியுதுணைத் தலைவர் பி.நடேசன் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்ட பொருளாளர் என்.நித்யானந்தம், மாவட்ட துணை நிர்வாகிகள்ஏ.ஜி.சந்தானம், எம்.சந்திர சேகரன் ஏஜடியுசி மாவட்ட நிர்வாகிகள் கே.கஜேந்திரன், எஸ்.மயில்வாகனன்,ஜெ.அருள், ஏஐசிசிடியு நிர்வாகிகள் ஏ.ஜெய ராஜ்,  பி.அம்பேத்கர்.வி.பவானி ஆகி யோர் பேசினர். யுடியுசி  நிர்வாகி எம். ரஹமத்துல்லா நன்றி கூறினார்.