மதுரை,செப்.1- நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை மறந்து, இளம் சாதனை மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழி களை புறக்கணித்து விட்டு இந்தி மொழியை திணித்துள்ள ஒன் றிய பாஜக அரசின் தணியாத இந்தி வெறி நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: கடந்த வருடம் கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (Kishore Vaigyanik Protshahan Yojana) கல்வி உத வித் தொகைக்கான தகுதித் தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென வலி யுறுத்தினேன். அப் பிரச்சனை யில் ஒன்றிய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் “அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் உள் ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வழங்கப்படும்” என உறுதி அளித்தது. இப் போது அந்த திட்டமே “இன்ஸ்பை யர் சி” (Inspire She) என்ற திட் டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது என்பது தனிக் கதை.
இன்னொரு புதிய கதைக்கு வருவோம். “செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிர தமர் கல்வி உதவித் தொகை திட்டம்” (PM Young Achievers Scholorship Award Scheme for Vibrant India) பயன் பெறு வதற்கான தகுதித் தேர்வு 11. 9.2022 அன்று நடைபெறவுள் ளது. இது 9 வது வகுப்பு 11 வது வகுப்பு பயிலும் இதர பிற்பட் டோர், கல்வி ரீதியாக பிற்பட் டோர், சீர் மரபினர் மாணவர் களுக்கான உதவித் தொகை திட்டம் ஆகும். இந்த தேர்வுக்கான கேள்வித் தாள்களும் இந்தியிலும், ஆங்கி லத்திலும் மட்டுமே இருக்கும் என “திட்ட தகவல் அறிக்கை” (Information Bulletin - page 8) மற்றும் “பொது அறிவிக்கை” (Public Notification -27.7.2022) யில் கூறப்பட்டுள்ளது.
அடித்தள மாணவர்கள் பயன் பெற என ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் கேள்வித் தாள் தருவேன் என்பது என்ன நியாயம்? கிராமப்புற மாண வர்கள் - அரசுப் பள்ளி மாணவர் கள் எப்படி இந்தி பேசும் மாநில மாணவர்களோடு போட்டி போடு வார்கள்? இது அப்பட்டமான பாரபட்சம். அநீதி. கடந்த ஆண்டு இதே போன்ற பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தந்த வாக்குறுதி நினைவில் இருக்காதா? இல்லை இந்தி பேசாத மாநி லங்களின் மாணவர்கள் தேர் வில் வெற்றி பெற தவிக்கட்டும் என்று எண்ணுகிறீர்களா? ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடவும், நீதிமன்றத்திற்கு அலையவும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. மொழி உரிமை தொடர்பானது. எங்கள் குரல் சோராது! ஓயாது! தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித் தாள் வழங்க வேண்டுமென்று கேட்டு ஒன்றிய அறிவியல் மற் றும் தொழி்ல் நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.