tamilnadu

img

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.ராஜூ தொகுத்துள்ள “விளிம்பு நிலை மக்களின் உண்மை நிலை

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.ராஜூ தொகுத்துள்ள “விளிம்பு நிலை மக்களின் உண்மை நிலை” (தி தலித் ட்ரூ) என்ற நூல் வெளியீட்டு விழா காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு செயலாளர் கே.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் செவ்வாயன்று (மே 17) நடைபெற்றது. நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட தொகுப்பாசிரியர் கே.ராஜூ பெற்றுக் கொண்டார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மதிமுக செயலாளர் துரை வைகோ, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், எம்.சிந்தனைசெல்வன் (விசிக), பி.அப்துல்சமத் (தமுமுக), பேராசிரியர் எஸ்.கே.தொரட், ராஜசேகர் உண்ட்ரு, ஜிக்னேஷ் மேவானி (குஜராத் எம்.எல்.ஏ), ஏ.அருள்மொழி (திக), பி.எஸ்.அஜிதா (வழக்கறிஞர்), உதவி பேராசிரியர் லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.