வெப்பநிலை அதிகரிக்கும்
சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்பதால் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளனர்.
நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைப்பு
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வ தேச தரத்தில் ரப்பர் மெட்டீரியல் உதவியுடன் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டது. இந்த ஓடுதளத்தில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. இதனால் புதி தாக சர்வதேச தரத்தில் ஓடுதளம் அமைக்க ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, சர்வதேச தரத்தில் வெளி நாட்டு ரப்பர் உதவியுடன் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. இதனால் புதிய சிந்தடிக் ஓடுதளம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரி கிறது. இது பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
வரும் கூட்டம் ஓட்டாக மாறாது!
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “விஜய் செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரைப் பார்க்க அனைவரும் வருவது இயல்பு. விஜய் சிவகாசி வந்தால் நாங்கள்கூட ஓரமாக நின்று அவரை பார்ப்போம். வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. நடிகருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுவது எம்ஜிஆர் உடன் முடிந்து விட்டது” என்றார்.
‘உயிரைக் கொடுத்து காக்கின்றனர்’
தஞ்சாவூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ் வார் மக்கள் இயக்கம் சார்பில், பாரம்பரிய விதைகள், நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வகையில், ‘நம்மாழ்வார் சித்திரைத் திருவிழா’ தஞ்சாவூரில் ஏப்.25 அன்று தொடங்கியது. ஞாயிறன்று நிறைவடைந்த இவ்விழாவில் திரைக்கலைஞர் ரோகிணி பேசுகையில், “விவசாய நிலங்கள் குறைந்து கொண்டு வருவதாக எனக்கு தெரியவில்லை. நிலங்களை விவசாயிகள் உயிரை கொடுத்து பாதுகாத்து வருகின்றனர். அவர்களுக்கு மிகப் பெரிய லாபங்கள் கிடைப்பதில்லை. லாபம் இல்லாவிட்டா லும் விளைநிலங்களை கைவிடக் கூடாது என்பதில் விவ சாயிகள் உறுதியாக உள்ளனர்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு!
கோவை: கோடை விடுமுறையையொட்டி, பல்வேறு சிறப்பு ரயில்களின் சேவைகளை தெற்கு ரயில்வே நீட்டித்து வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை - கோவை இடையேயான சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப் பட்டுள்ளது. உயிரைப் பறித்த பூனை! மதுரை: அவனியாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பூனை ஒன்று கடித்துள்ளது. இதை அவர் கண்டுங்காணாமல் விட்ட நிலையில், காயம் பெரிதாகி ரேபிஸ் தொற்று ஏற்பட் டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கு தனி சிகிச்சைப் பிரிவில் இளைஞர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொற்றால் கடும் வேதனைக்குள்ளான இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். முறையான சிகிச்சை பெறாமல், அலட்சியமாக விட்டது பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
எம்.சாண்ட் விலை ரூ.1000 குறைப்பு
சென்னை: எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி ஆகிய வற்றுக்கு ஏற்றப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கள் கூட்டத்தில் இதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. மேலும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயித்திடவும் முடிவு செய்துள்ளது.
சாத்தையாறு அணை தூர்வாரப்படும்: அமைச்சர் தகவல்
சென்னை, ஏப்.27 - தமிழ்நாடு சட்டப்பேரவையில், சனிக்கிழமை மதுரை மாவட்டம் சோழவந்தான் தேனூர் கால்வாய் சீரமைத்தல் மற்றும் சாத்தையார் அணையை தூர்வாருதல் குறித்து உறுப்பினர் ஆர்.வெங்கடேசன் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகில் உள்ளது தேனூர் கால்வாய். இதன் முகப் பின் அருகில், வைகை ஆற்றின் குறுக்கே உள்ள படுகை அணையை சீர் செய்ய வேண்டும். அதேபோல் தேனூர் கால்வாயை தூர்வாருவதற்கு 29.60 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது. அரசின் நிதி ஆதா ரத்தைப் பொறுத்து எதிர்வரும் நிதி ஆண்டுகளில் முன்னுரிமை அடிப் படையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும் சாத்தையாறு அணை யில் துறையின் சார்பில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மண் படிவு உள்ளது கண்டறியப் பட்டுள்ளது. நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வைகை, பேச்சிப்பாறை, அமராவதி மற்றும் மேட்டூர் அணைகளில் வருவாய் ஈட்டும் அடிப்படையில் தூர்வார விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் செயலாக்கப்பட்டு அதன் பயன்பாடு மற்றும் விளைவு கள் விரிவாக கூர்ந்தாய்வு செய்யப் படும். அதன் அடிப்படையில் பிற அணைகளிலும் தூர்வார நடவ டிக்கை மேற்கொள்ளும் போது சாத்தையாறு அணையையும் தூர் வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றும் அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.