கொலம்பியாவின் பொதுத் தேர்தலில் வெளி நாட்டில் வசிக்கும் கொலம்பியக் குடிமக்கள் வாக்களிக்கும் பணி துவங்கியுள்ளது. கொலம் பியாவைச் சேர்ந்தவர்களில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 565 பேர் வாக்களிக்கும் உரிமையோடு வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தும் வகையில் 66 நாடு களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகிறார்கள். நியூசிலாந்தில் தான் முதல் வாக்கு பதிவானது.
எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் பணியில் ஈடு பட்டால் ஒரு பீப்பாயின் விலை 300 டாலருக்கும் மேல் செல்லும் என்று மேற்கத்திய நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணைப் பிர தமர் அலெக்சாண்டர் நோவக், “ரஷ்ய எண்ணெய் புறக்கணிப்பு என்ற நடவடிக்கையை மேற் கத்திய நாடுகள் மேற்கொண்டால் உலக சந்தையில் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி யது வரும்” என்று தெரி வித்துள்ளார்.
புதிய அரசிற்கு பர்கினோ பசோ நாட்டின் ஜனாதிபதி பால் ஹென்றி டமிபா ஒப்புதல் அளித்துள்ளார். ஜனவரியில் ராணுவக் கலகம் நடந்தது. அதற்கு முன்பு இருந்த அமைச்சர வையில் இடம் பெற்றிருந்த ராணுவ அமைச்சர் மட்டுமே புதிய அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார். மூன்று ஆண்டு களுக்கு கலகத்தலைவர் டமிபா ஜனாதிபதியாக நீடிக்கவிருக் கிறார். புதிய அமைச்சரவை எவ்வளவு நாட்களுக்கு என்ற தகவல் இதுவரையில் தெரிவிக்கப் படவில்லை.