tamilnadu

img

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம் மே 4 முதல் மேலும் அதிகரிக்கும்

சென்னை, மே 1 கோடை வெப்பம் இந்த ஆண்டு முன்னெ ப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் படிப்படியாக அதிகரித்து மே மாதத் தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும். இந்த கோடை வெயில் மே மாதத்தில் தொட ங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு, மார்ச் மாதம் ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதி லும் கடந்த ஏப்ரலில் பெரும் பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி இருந்தன. ஆரம்பமே இப்படி இருக்கிறது என்றால், இன்னும் போகபோக மேலும் அதிகரிக் கும், வருகிற 4 ஆம் தேதி (வியாழக்கிழமை) கோடை வெப்பம் 25 நாட்கள் நீடிக்கும் இந்த  வெயில் காலம் 28 ஆம் தேதியுடன் விடை பெறும். எனவே மக்கள் யாரும் மதிய நேரம் வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறு த்தப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தை பொறுத்த வரையில், கோடை காலத்தின் இறுதி பகுதி யான மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதை அவர்கள் மறுக்க வில்லை. இந்த ஆண்டை பொறுத்த வரையில், அக்னி நட்சத்திரம் வாட்டி வதைக்குமா?, இதுவரை பதிவான வெயில் அளவை விட அதிகமாக பதிவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.