திருவண்ணாமலை,பிப்.9- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ள பாலியப்பட்டு சுற்று வட்டார கிராம மக்களின் வாழ் வாதாரத்தின் அடிப்படையாக இருப்பது விளை நிலங்கள். அதேபோல், காலம் காலமாக வசித்து வரும் குடிமனைக ளும்தான். இத்தகைய சூழ்நிலை யில், இந்த பகுதியில் இந்த இரண்டு வகையான நிலங்களை யும் அழித்து பெரு நிறுவனங்க ளுக்காக சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், உள்ளூர் மாவட்ட மக்களது வாழ்வையும் தொழிலையும் கணக்கில் கொள்ளவில்லை. மக்களின் கருத்துக்களை கேட்கவில்லை. சுற்றுச் சூழல் சட்டத்தையும் மதிக்கவில்லை. அரசு அதிகாரிகளின் நடவடிக்கை களால் பாதிக்கப்படும் மக்கள் ஒன்று திரண்டு, சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் உருவாக்கினர். அந்த இயக்கம் சார்பில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக 50 ஆவது நாள் போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தினர்.
அரசு தரிசு நிலங்களில் சிப்காட் அமைப்பதற்கு மாறாக, விவசாயிகளின் வாழ்வாதாரத் தையும், வேளாண் உற்பத்தியை யும் பாதிக்கும் வகையில் சிப்காட் அமைக்க முயற்சிப்பதை கை விட வலியுறுத்தி இந்த போராட் டத்தை நடத்தி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடந்த போராட்டத் தில் ஒருங்கிணைப்பாளர் சம்பத், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், விவசாயிகள் அமைப்பு நிர்வாகி கள் பலராமன், அழகேசன், ரஜினி ஏழுமலை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், எஸ்.ராமதாஸ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு, உயர்மின் கோபுர பாதிப்பு விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.