தளராத முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு தள்ளாத கிழவன், அதிர்ஷ்டக்கட்டை என்று தன்னை ஏளனம் செய்பவர்கள் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதும் 85 ஆம் நாளில் ஆழக்கடலில் ஒரு பெரிய மீன் மர்லின் 750 கிலோ எடையுள்ளது அவ னது தூண்டிலில் அகப்படுவதும் தப்பிக்க முயற்சிக்கும் அந்த மீனுக்கும் அதைப் பிடித்துக் கொண்டு வர யத்தனிக்கும் கிழவனுக்கும் நடக்கும் போராட்ட முமே கிழவனும் கடலும் நாவல். ஒற்றை மனிதனாய் நடுக்கடலில் மிகப்பெரிய மீனோடு கிழவன் சாந்தி யாகோ பேசுகிற பேச்சும் நடத்தும் யுத்தமும் நம்மை பதைபதைக்கச் செய்யும். அதில் வெற்றி பெற்ற கிழவனும் அவனுக்குப் பிரியமான சிறுவன் மனோலினும் நம் மனதில் நீங்கா இடம்பிடித்து விடு கிறார்கள். இந்த கியூப மீனவரின் கதை யை ஒரு தனித்துவமான நடையில் எழுதியிருக்கும் அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே நம்மை கதை யோட்டத்துடன் கட்டிப்போட்டு விடுகிறார். இந்தச் சிறப்பினாலேயே உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கிழவனும் கட லும் திகழ்கிறது. இந்த நூலின் சிறப்பு படங்கள் நிறைந்து நமக்கு காட்சித் துல்லியத்தை உணர்த்துவதாகும்.இதை மிகச்சரளமான நடையில் தமிழாக்கி யிருக்கிறார் ஆதனூர் சோழன். இந்த நாவ லைப்படிப்பவர்களுக்கு உத்வேகமும் தன்னம்பிக்கையும் உண்டாவது உறுதி.
கிழவனும் கடலும் (நாவல்) ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே வெளியீடு: நக்கீரன், 105, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14
பக்கம் : 112, விலை: ரூ100