சென்னை, மே 2 - இலங்கையில் ஏற்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சி இந்தியாவிலும் விரைவில் எழும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 136வது மேதின பேரணி பொதுக்கூட்டம் நாடு முழுவதும் உற்சாகமாக கடைபிடிக் கப்பட்டது. இதன் ஒருபகுதியாக சிஐடியு - ஏஐடியுசி சார்பில் சைதாப்பேட்டையில் தொடங்கிய பேரணி தி.நகரில் நிறைவ டைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: இலங்கை அரசு சிங்களவர் - தமிழர், இஸ்லாமியர் - கிறிஸ்த வர் என மோதவிட்டு ஆட்சி நடத்தி வந்தனர். அந்நாட்டு அரசு கடைபிடித்த தவறான பொருளா தார கொள்கையால் பாதிக்கப் பட்ட உழைக்கும் வர்க்கம் எழுச்சி பெற்று போராடி வருகிறது. 4ந் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும், மக்களின் எழுச்சி அடங்காது. இந்த எழுச்சியை சீர்குலைக்கும் வேலைகளை அங்குள்ள அரசு செய்கிறது. இலங்கையை போன்றே இந்தியாவும் மாறி வருகிறது.
இந்தியாவின் உணவு கிடங்கு களில் பல லட்சம் டன் உணவு தானியங்கள் புழுத்து கிடக்கின் றன. அதனை மக்களுக்கு வழங்க மறுக்கின்றனர். இதன் காரணமாக பட்டினியால் கிடப் போர் பட்டியலில் இந்தியா 104வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவின் 25 லட்சம் கோடி ரூபாய் கடனை அடைப்போம் என்று ஆட்சிக்கு வந்த மோடி, மேலும் 85 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இந்த நெருக்கடியை சமாளிக்க பொதுத் துறைகளை விற்று வருகின்றனர்.
புரோக்கர்
நலிவடைந்த நிறுவனங்களை விற்பது என்ற நிலை மாறி லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவ னங்களை அரசு விற்கிறது. அதை அம்பானி, அதானி போன்றோர் வாங்க பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுக்கின்றன. பிறகு அந்த கடனை அரசு தள்ளுபடி செய்கிறது. இப்படி கோல்மால் செய்யும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. அம்பானி அதானிக்கு புரோக்கராக பிரதமர் மோடி செயல்படுகிறார். மக்கள் வறுமையில் வாடும் போது உலகின் முதல் 10 பணக் காரர்கள் பட்டியலில் இந்தி யாவை சேர்ந்தவர்கள் 4 பேர் இடம் பெறுகின்றனர். 8 வருடத்தில் பாஜக அரசு முதலாளிக ளுக்கு 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது. கார்ப்பரேட்கள் மீதான வரியை குறைத்து 15 விழுக்காடாக மாற்றியுள்ளனர். வேலையின்மை, அத்தியாவ சிய பொருட்களின் விலைகள் உயர்வு கடுமையாக உயர்ந்துள் ளன. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை 200 விழுக்காடு உயர்த்தி உள்ளனர். நலத்திட்டங் கள் அவற்றிற்கான நிதியை வெட்டுகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் 16 ஆயிரம் கோடி ரூபாய் கூலியை வழங்கா மல் வைத்துள்ளனர். ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது. இவற்றிலிருந்து திசை திருப்ப மத, சாதிய மோதலை உருவாக் குகின்றனர். அடிப்படை உரிமை களை பறிப்பு, மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றனர். ஒரு நபர் ஆதிக்கத்தின் கீழ் நாடு சென்று கொண்டிருக்கிறது. பாசிச தன்மை வாய்ந்த நடவடிக்கை களை எதிர்த்து, இலங்கையை போன்றே இந்தியாவிலும் உழைக் கும் வர்க்கம் ஒன்று திரண்டு எழும். கார்ப்பரேட்டுகளுக்கு எதி ரான மாற்றுப்பாதை உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக்கூட்டத்திற்கு சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஏஐடி யுசி தேசியச் செயலாளர் வகிதா நிஜாம், நிர்வாகிகள் சி.சீனிவாசன், இரா.அழகேசன், சிஐடியு நிர்வா கிகள் மா.விஜயகுமார், ஜெ.முக மது அனீபா உள்ளிட்டோர் பேசினர்.
இரா.முத்தரசன்
வடசென்னை மாவட்டம், பெரம்பூரில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: பாஜக ஆட்சியில் மே தின விடுமுறைக்கு ஆபத்தும் ஏற்படும் போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தரு வதாக சொன்னார்கள். அதன் படி 16 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 16 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இந்த நிலை யில்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ‘எனது வேலை எங்கே’ என்ற ஒற்றை முழக்கத்தோடு நான்கு முனைக ளில் இருந்து சைக்கிள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல்கள் வந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வதில்லை. ஆகவே, தேர்தல் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசுக்கு தொடர்பில்லை. எண்ணெய் நிறு வனங்கள் விலையை தீர்மானிக் கின்றன என்கிறது ஒன்றிய அரசு. எண்ணெய் நிறுவனங்கள் என்ன வெளி நாட்டிலா உள்ளது?
800 வகையான மருந்துகளின் விலை 10 ரூபாய் வரை உயர்ந் துள்ளது. சுங்கச்சாவடி கட்ட ணம் 40 ரூபாய் வரை அதிகரித் துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகி றது. இதனை கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் குறித்தே சிந்திக்கின்றனர். இதற்கெதிராக 25 கோடி தொழிலாளர்கள் நடத்திய 2 நாள் வேலை நிறுத்தம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி. அரசியலமைப்பு சட்டம், தொழி லாளர் நலச்சட்டங்கள், ஜனநாய கம், நாட்டின் ஒற்றுமையை ஆகிய வற்றை பாதுகாக்க உறுதி யேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
ஏ.கே.பத்மநாபன்
சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன், தனித்தனி பாத்திரங்களில் குடிநீர், ஆலைகளில் தனித்தனி நுழைவு வாயில் என்று இருந்த அந்த கால நிலையை மீண்டும் கொண்டு வர ஒன்றிய ஆட்சி யாளர்கள் முயற்சிக்கின்றனர் என்றார். அரசு, முதலாளிகள், தொழி லாளர்கள் என முத்தரப்பும் ஏற்றுக் கொண்ட அறிவியல்பூர்வமான கணக்கீட்டின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோருவதாக குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன; கடுமையான தாக்குதல் தொடுக் கப்படுகின்றன. இதற்கெதிராக போராட்டங்களை ஒன்றுமை யோடு, உறுதியோடு முன்னெடுப் போம். தொழிலாளர், விவசாய விரோத கொள்கைகளை முறி யடிப்போம், மதச்சார்பின் மையை, ஜனநாயகத்தை, மாநில உரிமைகளை பாதுகாப் போம். மொழி, இனம், மதம், சாதி என அனைத்தையும் கடந்து ஒன்றுபட்டு போராட சபதமேற் போம் என்றார். இந்தக் கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.குப்பன் தலைமை தாங்கினார். ஆர்.ஜெயராமன், வி.குப்புசாமி, பி.என்.உண்ணி, சு.லெனின் சுந்தர், கே.ஜாகிர்உசேன் (சிஐ டியு), எம்.எஸ்.மூர்த்தி, பியூலா ஜான் செல்வராஜ், எம்.வசந்த குமார், கோட்டி சுரேஷ் (ஏஐடி யுசி), கே.எஸ்.கார்த்தீஷ்குமார் (வாலிபர் சங்கம்), பாக்கிய லட்சுமி (மாதர்சங்கம்) உள்ளிட் டோர் பேசினர்.