tamilnadu

img

உன்னுடையது எது?- - கே.பாலபாரதி

பூவிதழின் மென்மையும்
கத்தியின் கூர்மையும்
கொண்ட அவள் அழகான மூக்கை 
கண்ணிமைக்கும்
நேரத்தில் அறுத்தெறிந்தான்
இலக்குவன்.
ஆறாத துயரம் அது.
மூக்கை இழந்தவளானாள்.
வனம் முழுதும் வலியோடு சுற்றித் திரிந்தாள்.
அவள் வலியை அறிய முற்படாத இந்த பிரபஞ்சத்தில் தேடிக்கொண்டே இருந்தாள்.
கம்பன் கூடவா அறியவில்லை
அவளது வெட்டப்பட்ட மூக்கு
எங்கே விழுந்ததென்று...
கதறிக்கொண்டிருந்தாள்
சூர்ப்பனகை.
கலங்காதே சகோதரி...
உனக்கு உன் மூக்கு தானே வேண்டும்.. 
இங்கே பார்..
வீழ்ந்து கிடக்கும்
இவையாவும் வெட்டப்பட்ட மூக்குகளே.. 
நிதி 
நீதி  
கல்வி 
வேலை 
உணவு 
உரிமை
சட்டம்....
பெயர்கள்தான் வேறு. 
உன்னுடையது எது?