tamilnadu

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை துவக்கம்

புதுதில்லி,மார்ச் 12-    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி இறுதியில் தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம்  தேதி 2022 -23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் முதல் அமர்வு, சுமார் ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அமர்வு திங்களன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற வுள்ள இந்த அமர்வும் கொரோனா விதிகளின் படியே நடைபெறும் என்றும்  ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதுபற்றிய விவாதங்கள் இடம்பெறக்கூடும் என்றும் தெரிகிறது.