tamilnadu

குமரியில் உள்வாங்கிய கடல்

கன்னியாகுமரி, பிப்.19- கன்னியாகுமரியில் கடல் திடீரென்று உள்வாங்கி காணப்பட்டது.இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும்  மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேர லைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறு வது, கடல் அலையே இல்லாமல் அமைதி யாக குளம் போல் காட்சி அளிப்பது, போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில்  கடல் திடீர் என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50  அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது.  இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே  தெரிந்தன.  சூரியன் உதயமாகும் காட்சியை  காண கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.