tamilnadu

img

கேரள இளைஞர்களின் எழுச்சிக் கலைஞன் வேடன் - ப.தட்சிணாமூர்த்தி

கேரள இளைஞர்களின் எழுச்சிக் கலைஞன் வேடன்

வித்தியாசமாய், வீரியமாய் கேரளத்தில் வாலிபர்களை ஈர்த்த ராப் இசைக் கலைஞன் வேடன் (Hunter) என அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி ( 30 ) என்ற இளைஞன் கேரளாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பேசப்படும் கலைஞனாக மாறி உள்ளார். திருச்சூரில் உள்ள முலகுன்னத்துகாவைச் சேர்ந்ததுதான் வேடனின் குடும்பம். வேடனின் தாயார் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர் , வேடனின் தந்தை முரளி புலையர் வகுப்பைச் சேர்ந்த மலையாளி. கேரள மண்ணில் ராப் இசையில் மேடையேற்றப்படும் புரட்சிக்கவிதைகள், பாடல்கள், லட்சோபலட்சம் வாலிபர்களை இன்று வசீகரித்துள்ளது. திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, இடுக்கி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பத்தாயிரக்கணக்கில் கேரள இளைஞர்கள் திரள்கின்றனர். அதே சமயத்தில் சங்பரிவாரத்தினர் வேடன் மீது மூர்க்கத்தனமான பிரச்சாரங்களை கட்டவிழ்த்துட்டுள்ளனர். இதன் காரணமாகவே வேடன் மீதான அன்பும் கருத்தியல் ஈர்ப்பும் பன்மடங்கு இளைஞர்கள் மத்தியில் கூடியுள்ளது. 

குரலற்றவர்களின் குரல்

ராப்பிங் ( Rapping ) என்பது பொதுவாக ஊர்  வட்டார கவித்துவ எதுகை மோனை இசை மொழி யில் அதிவேக தாளக்கட்டுடன் கூடிய பேச்சுக் குர லால் வழங்கப்படும் உணர்ச்சிக் கலை வடிவ மாகும். தமிழ் மொழி உட்பட பெரும்பாலான இந்திய  மொழிகளில் ராப் என்ற பெயரில் அர்த்தமற்ற வார்த்தை வரிசைகள் அழுகிப்போன வர்ணனைகளு டன் இணைய நிகழ்ச்சிகள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவிலேயே வேடன் என்னும் கேரள  இளைஞன் மட்டுமே ராப் இசை கலையின் வடி வத்தில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மலையாளத்திலும் தமிழிலும்கூட கவிதைகள் எழுதி பொங்கி வழியும் உணர்ச்சிப் பெரு வெள்ளத்தோடு அரங்கேற்றி வருகிறார். எனவே தான் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் வர வேற்பும் ஆதரவும் உச்சத்திற்கு சென்று உள்ளது. குர லற்றவர்களின் குரல் ( Voice of Voiceless) என்னும்  ராப் இசைத் தொகுப்பில் வரும் வேடனில் கவிதை வரிகள் ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் சோகங்கள், கோபங்கள், ஏக்கங்கள் எழுச்சியான ராப் இசையின் தாளக்கட்டில் உரத்து தெறித்து விழுகின்றன.  கண்ணுக்குத் தெரியாத சாதி மத பாகுபாடு ஆண்டுகளுக்கு முன்பு நீண்டு தொடங்கியது,  தொடர்ந்து என்னை வேட்டையாடும் ஐயோ, நான் அமைதியாக இருக்க  நிறைய துன்பங்களை அனுபவித்தேன் என் முதுகில் உள்ள வடு உங்கள் துரோகத்தின் சுவடு நான் எழுதிய வரிகளில்  பாதிக்கும் மேற்பட்டவை என்னுடையவையல்ல. ஒரு மணல் துகள் போதும். ஒரு மணல் துகள் போதும். நீர் வயல்களின் அடிமையும் உடமையும் யாரால்? ஆயிரக்கணக்கான வயல்களை வேலிகளாக மாற்றியது யார்? வேலிகளில் எத்தனை குடும்பங்களை இழந்துள்ளோம்? எத்தனை தலைகள் சாய்ந்துள்ளன? நாட்டின் போலித்தனமான தேசபக்தி என்பது  மதம் மற்றும் சாதியின் நோய் நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையனும் அல்ல  நீ தம்புரானும் அல்ல ஒரு மயிரும் அல்ல  வேடனின் இப்படிப்பட்ட கவிதை வரிகள் சங்பரி வாரங்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. புத்தி  பேதலித்து வக்கிர அமிலத்தை எங்கும் வீசி வரு கிறது.  

சங்கிகளின் எதிர்ப்பும்  மார்க்சியத்தின் ஆதரவும்

கேரளா முழுவதும் சங்பரிவாரங்கள் மூர்க்கத்தன மான பிரச்சாரத் தாக்குதல்களை வேடன் மீது தொடுத்து  வருவதன் தொடர்ச்சியில் கேரள பாஜகவின் ஆலோ சகர்களில் ஒருவரான வி.எஸ். மினிமோள் பிரதமர் நரேந்திர மோடியை ஒரு போலி தேசபக்தர் என்று வேட னின் பாடல் வரிகள் இழிவுபடுத்திவிட்டதாக சட்ட விரோத நடவடிக்கைகள் ( தடுப்புச் சட்டத்தின்) சட்ட விதி களின் கீழ் தேசிய புலனாய்வு முகமை ( NIA) விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதத் தூண்டியதாக தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் இன் கேரள இதழான கேசரியின் ஆசிரியர் என்.ஆர். மது வேட னின் பாடல்கள் சாதி அடிப்படையிலான தீவிர வாதத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணி கேரள அரசும் வேடனை முழுமையாக ஆதரித்து வரு கிறது. பாராட்டுகிறது. பூமி ஞ்ஞான் வாழுன்ன இடம் ( நான் வாழும்  பூமி) என்னும் வேடனின் கவிதையை கேரள  கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில்  கேரள அரசு இணைத்துள்ளது. பெருந்திரள் வாலி பர்கள் பங்கேற்கும் வேடனின் ராப் இசை நிகழ்ச்சி களின்போது சங்பரிவாரங்களால் குழப்பங்கள் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கேரள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI ) தோழர்  கள் காவல்துறையினருக்கு இணையாக அரணாக நிற்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில  செயலாளர் தோழர் எம்.வி. கோவிந்தன், ஆர்.எஸ். எஸ்ஸின் விமர்சனங்களுக்கு பதிலளித்து வேடன்  நவீன இசையின் முன்னோடி. வரலாற்று விழிப்புணர்வு டன் கூடிய ராப் மூலம் உயர் சாதி மேலாதிக்கத்தை அவர் அம்பலப்படுத்துகிறார். அவரது இசை அடி மைத்தனத்தில் வாழும் ஒரு ஏழை விவசாயி அல்லது  தொழிலாளியின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது, எனவே அது மகத்தான சக்தியைக் கொண்டுள்ளது. அவர் கேரளாவில் வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவர். தானே பாடலை எழுதி இசையமைத்து மேடை யில் அளிக்கும் வேடன், இளைஞர்களிடையே வர வேற்பைப் பெற்ற ஒரு கலைஞர். அவரை வேட்டை யாடும் எந்த முயற்சியையும் கேரள சமூகம் ஏற்றுக் கொள்ளாது. வேடனுக்கு கேரளாவின் பாதுகாப்பு உள்ளது என்றும் கூறினார். தனது மேடைகளில் ஹிரோஷிமா, நாகசாகி அழிவை வேடன் பாடுகிறார். இஸ்ரேலுக்கு எதிராக  பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவை காட்டும் விதமாக அந்நாட்டுக்கொடியை தன் உடல் மீது போர்த்திக்கொள்கிறார். இவை அந்த இளைஞனின் உணர்வை மிக உயர்ந்த வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளன. திரை உலகத்தில் வேடனுக்கு  ஆதரவாக திரை கலைஞர் மம்முட்டிதான் முதல் முத லாக குரல் கொடுத்தார். இரண்டாயிரம் ஆண்டுகளாக  ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வேடன் பேசி வரு கிறார் அவரை தடுக்காதீர்கள் என்றார். திரைக்கலை ஞர் பிரிதிவிராஜ் சுகுமாரன் வேடனை பாராட்டியும் ஆதரித்தும் வருகிறார். ஒவ்வொரு நாளும் ஜன நாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவு வேடனின் நிகழ்ச்சிகளுக்கு பல்கிப்பெருகி வருவதை ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

 சந்தடி சாக்கில் சிந்து பாடும்.....

அதே சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தத்துவார்த்த எதிரிகள் சந்தடி சாக்கில் இடது முன்னணி அரசாங்கத்தை குறை கூறி தமிழகத்திலும் கேரளத்திலும் பேசி வருகின்றனர். புரட்சிகரக் கருத்துகளுடன் உயர்ந்து வரும் வேடனை, கேரள அரசு கஞ்சா வைத்திருந்ததாகவும் புலிப்பல் வைத்தி ருந்ததாகவும் கைது செய்திருக்கிறது என்று கூறும்போதே இடது முன்னணி அரசிற்கு உள்நோக்கம்  உள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்ற னர்.  இடது முன்னணி அரசின் வெற்றிகரமான நான்கா வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற 29.4.2025 நிகழ்ச்சிக்கு வேடன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால்  28.4.2025 அன்று வேடன் கொச்சியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் கஞ்சா போதைப்பொருள் வைத்தி ருந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் 1972 ஆம் ஆண்டு  வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் புலிப் பல் வைத்திருந்ததாகவும் வனத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அரசு விழாவிற்கு அழைக்கப்பட்ட வேடன் இடுக்கியில் மேடையேற்றப்பட்டார். நான்கு  நாட்கள் சிறையிலிருந்து வந்த வேடன், முதன்முறை யாக அரசின் இடுக்கி மேடையில் தவறு நடந்தது. இனி என் வாழ்வின் எதிர்காலத்தில்இதுபோன்ற எந்தத்தவ றும் நடக்காது. பொது ஜனங்களே, குட்டிகளே, யுவாக்களே, எனிக்கி மாப்பு தரணும் என்று வெளிப் படையாக அறிவித்தார் என பாலக்காட்டைச் சேர்ந்த  பத்திரிகையாளர் அஜய்குமார் தெரிவித்தார். இதே போன்று தந்தம் வைத்திருந்த வழக்கில் புகழ்பெற்ற திரைக் கலைஞர் மோகன்லால் 3.11.2023 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று  பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.  கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுபற்றி கூறுகையில், “போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறிய சமூகத்திற்கும், பட்டி யல் சாதி சமூகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  ஆனால் புலிப் பற்கள் உள்ளிட்ட பிரச்சனைகளில் நாம்  அமைதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  கஞ்சா பயன்படுத்தியதை வேடனும் ஒப்புக் கொண்டு தன்னை திருத்திக் கொள்ளவதாக கூறிய தாகவும் கேரளா செய்திகள் தெரிவித்தன. அம்பேத்  கர் அய்யன்காளி சிந்தனைகளை பின்பற்றுபவராக வும் இயல்பிலேயே இடதுசாரி வர்க்க நேய சிந்தனை கள் அவர் பாடல்களில் வெடித்துச் சிதறி வெளிப்படு வதையும் நாம் காணமுடியும். கேரள மண்ணில் சாதி, மதவெறி சனாதனிகளுக்கு எதிராக உருவாகியிருக்கும் நவீன ராப் இசை புரட்சிக்  கலைஞனான வேடனை, கேரள வாலிபர்கள் உச்சி  மீது வைத்து கொண்டாடுகிறார்கள். நாட்டின் அரசியல்  கலை இயல் வாழ்வில் நிச்சயமாக வேடன் ஒரு நவீன  நட்சத்திரம் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ்நாட்டு கலைத்துறையில் உள்ள வியாபாரிகள் மற்றும் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களின் வேறு பல  இலாவணி கூப்பாடுகளுக்கு மத்தியிலும் வேடனின் அதிரடித் தாக்கம்- சங்கிகளுக்கு எதிரான கருத்தியல் வெப்பத்தை தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் அதி கரித்து உள்ளது.