tamilnadu

img

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை,  அக். 24 - 58 ஏக்கர் பரப்பினைக் கொண்ட அடையாறு உப்பங்கழியை, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம்  சீரமைத்து ‘தொல்காப் பியப் பூங்கா’ உருவாக்கும்  திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்தப் பூங்காவை 22.1.2011 அன்று  அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். ஆனால், அடுத் தடுத்த ஆண்டுகளில் முறையான பரா மரிப்பின்றி தொல்காப்பியப் பூங்கா பொலிவிழந்தது. இந்நிலையில், 42.45 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் தொல்காப்பியப் பூங்கா வின் மறுமேம்பாட்டுப் பணிகளை மேற் கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. அதன்படி, நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்கா ணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடை பாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப் பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புப் பாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணி கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடி வடைந்த நிலையில், தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.  பள்ளிச் சிறுவர்களுடன் இணைந்து பூங்காவை முதலமைச்சர் சுற்றிப் பார்த்தார்.  இந்தப் பூங்கா சென்னை ராஜா அண்ணாமலைபுரம், எம்ஆர்சி நகர்,  மந்தைவெளி, அடையாறு, பட்டினம் பாக்கம், மயிலாப்பூர் பகுதி மக்களுக்குப்  பயனுள்ளதாக இருக்கும்.