கோயம்புத்தூர், மார்ச் 3- 1938 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவங்கப்பட்டது. அன்றைய தினம் கோவை நகரில் இயங்கி வந்த பெரிய, பெரிய பஞ்சாலைகளில் நகரத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவ்வாறு பணிக்குச் சென்ற வர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈர்ப்பால் தங்களை பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தில் இணைத்துக் கொண்டு செயல்படத் துவங்கினர். அதேநேரத்தில், அவரவர் வசிப்பிடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
80க்கும் மேற்பட்ட கிராமங்களில்...
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டம் உச்சத்தில் நடந்து கொண்டி ருந்தது. அப்போது உடையாம்பாளையம், சின்ன வேடம்பட்டி, சு.நா.புதூர், ந.க.புதூர், மணிகாரம்பாளை யம், கணபதி, பூசாரிபாளையம், உருமாண்டாம்பாளை யம், வெள்ளக்கிணறு உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் துவங்கப் பட்டு, படிப்பகங்கள் அமைக்கப்பட்டன. இந்த படிப் பகங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிராம மக்களையும், இளைஞர்களை திரட்டுவதிலும், உள்ளூர் வளர்ச்சிக்கான பணிகளையும் முன்னேடுத்து வந்தது. இதன்பின் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் தலையீடு செய்வது என்ற அடிப்படையில், இப்பகுதி கட்சிக் கிளைகள் மக்களிடம் நிதி திரட்டியும், மாவட்ட நிர்வாகத்தின் உதவி பெற்றும், உழைப்பு தானம் செய்தும் குடிநீருக்காக கிணறுகள் வெட்டுவது, பள்ளிக்கூட வகுப்பறைகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டன. மேலும், தொழிற்சங்கத்தால் திரட்டப்பட்டிருந்த தொழி லாளர்கள் மூலம் மக்கள் வசிப்பிடங்களில் பொதுக் குழாய்கள் அமைத்து தருவது போன்ற பணிகளில் தங்களை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டனர்.
1956 தேர்தல்
இதன் மூலம் மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, 1956 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் உருவாக்கப் பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல் நடை பெற்றது. இதில் கணபதி (கிருஷ்ணன்), வெள்ளக் கிணறு (மருதாச்சலம்), சின்னவேடம்பட்டி (ஆர்.வெங்கிடு) உள்ளிட்ட பஞ்சாயத்துகளை கம்யூனிஸ்ட் கட்சி வசப்படுத்தி, இவர்கள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அப்போது பஞ்சாயத்து தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. அதன்பின், 1959,1962,1965,1968 ஆகிய ஆண்டு களில் நடைபெற்ற தேர்தல்களில் சின்னவேடம்பட்டி பஞ்சாயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இந்த காலகட்டங்களில் உடையாம்பாளை யம், சின்னவேடம்பட்டி, ந.க.புதூர், வேலப்பநாயக்கன் புதூர் ஆகிய கிராமங்களில் ஆரம்பப் பள்ளிகள் துவங்கப்பட்டன. இதன் துவக்க விழாவில் முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எம்.கல்யாண சுந்தரம் கலந்து கொண்டு பள்ளிக் கூடங்களை திறந்து வைத்தார்.
சின்ன வேடம்பட்டி...
அதே காலகட்டத்தில், சின்னவேடம்பட்டியில் குளம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆர்.வெங்கிடுவினால் துவங்கப்பட்டது. அன்றைய தினம், கிணற்றுப் பாசனத்தை நம்பியிருந்த விவசாயி களுக்கு குளம் அமைவது அவசியத் தேவையாக இருந்தது. ஆகவே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து வாய்க்கால் மூலம் குளத்திற்கு நீர்வர ஏற்பாடுகள் செய்து குளம் உருவாக்கும் பணிகள் துவங்கப்பட்டன. அதன்பிறகு, பல ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தபோதும், கட்சி அமைப்புகள் மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, 1986 இல் நடைபெற்ற தேர்தலிலும் சின்னவேடம்பட்டி பேரூராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. சிவசாமி தலைவராக பொறுப்பேற்றார். அக்கால கட்டத்தில் பஞ்சாயத்து பகுதியில் 9 ஏக்கர் நிலம் ஒதுக்கி, வீடற்ற சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. 1996 இல் நடைபெற்ற தேர்தலிலும், மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. சதாசிவம் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்று வி.இராமமூர்த்தி தலைவர் பொறுப்பில் செயலாற்றினார்.
குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு
இக்கால கட்டத்தில் கோவை மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சனை தலை தூக்கியது. ஆகவே, குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதன்படி குடிநீர் இணைப்பு வேண்டுவோருக்கு இல்லம் தேடிச் சென்று இணைப்பு வழங்கப்பட்டது. எவ்வித முறைகேடுகளுமின்றி பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற இப்பணி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் சீராக குடிநீர் விநியோகம் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மாநில அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் முறைகேடுகளின்றி பெற்றுத் தரப்பட்டது.
கோவை மாநகராட்சியுடன் இணைப்பு
இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு இறுதியில் சின்னவேடம்பட்டி பேரூராட்சி கோவை மாநகராட்சி யோடு இணைக்கப்பட்டு, அப்பகுதி 42 ஆவது மாமன்ற வார்டாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 42 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இக்காலத்தில்தான் இந்த பகுதி யில் சமுதாயக் கூடம் உருவாக்கப்பட்டது. மேலும், இளை ஞர்களின் கோரிக்கைகளை ஏற்று உள் விளையாட்டு அரங்கு உருவாக்கப்பட்டது. மாநகராட்சிப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படை யில், சின்னவேடம்பட்டி, ந.க.புதூர், உடையாம்பாளை யம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டுவது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டன. செய்யப்பட்டன. இதன்மூலம் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்கு உயர்த்தப்பட்டது. இப்பணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வாலிபர் சங்கம் மூலம் ரத்த தானம் வழங்கு தல், விளையாட்டு விழாக்கள் நடத்துவது, உழைப்பு தானம், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பணிகள் ஆகி யவை இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. அண்மையில், கொரோனா பெருந்தொற்றின் இரு அலைகளின்போதும், இப்பகுதி மக்களை தொற்றி லிருந்து பாதுகாக்க பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெருக்கடியான நேரத்தில் மக்களின் பாதுகாப்பு அரணாக நின்றது மார்க்சிஸ்ட் கட்சி.
இரு வார்டுகளிலும் வெற்றி
இந்நிலையில், 2022 இல் கோவை மாநகராட்சி வார்டுகள் மறுவரை செய்யப்பட்டதில், 42 ஆவது வார்டு முறையே 12 மற்றும் 13 ஆவது வார்டுகள் என இரு வார்டுகளாக மாற்றியமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற மாமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 12 மற்றும் 13 ஆவது வட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் 12 ஆவது வார்டில் வி.இராமமூர்த்தி மற்றும் 13 ஆவது வார்டில் என்.சுமதி ஆகியோர் போட்டியிட்டு, தோழமைக் கட்சிகளின் துணையோடு வெற்றி பெற்றனர். இதன்மூலம் 66 ஆண்டுகளாக தொடர்ந்து செங்கொடி இயக்கத்தின் உள்ளாட்சி மன்ற பணி மக்கள் பங்கேற்போடு தொடர்கிறது.