சென்னை,ஜூன் 24- மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்று பெற்ற 28 மாணவர்களை முதல்வர் மு.க.ஸ்டா லின் பாராட்டி வாழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு இளங் கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த தமிழகத்தின் பல்வேறு கல்லூ ரிகளைச் சேந்த 28 மாணவர்கள் மருத்து வப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்று பெற்றுள்ளனர். அந்த மாணவர்களை சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பாராட்டி முதல்வர் வாழ்த்தினார். மாண வர்கள் ஒவ்வொருவருக்கும் ஸ்டெதாஸ் கோப் மற்றும் மருத்துவச் சிகிச்சை கையேடு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். இம்மருத்துவ மாணவர்கள் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் தேர்வுகள் தவிர, ஒவ்வொரு துறையாலும் நடத்தப்படும் சிறப்பு பதக்கத் தேர்வு களிலும் பங்கேற்று மூன்று பதக்கங்க ளுக்கு மேல் வென்றவர்கள். இந்த பதக்கத் தேர்வுகள் எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மிக கடினமான முறைமை களை கொண்டதாகும். அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ‘’கல்லூரியின் சிறந்த மாணவர்’’ என்ற சான்றிதழும் வழங்கப் படுகிறது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில் குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.