tamilnadu

img

உணவுப் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு இரண்டிலும் முன்னிற்பது பஞ்சாப்!

பிரகாஷ் சிங் பாதல் அறிக்கை

சண்டிகர், ஜன.5- “இந்திய நாட்டிற்கான பஞ் சாப் மக்களின் தியாகத்தை ஒன் றிய பாஜக அரசு உணர வேண் டும்” என்று சிரோமணி அகாலி  தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தையொட்டி, பிர காஷ் சிங் பாதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருந்ததாவது: “ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 800-க்கும் மேற் பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகளின் இந்த தியாகத்தை ஒன்றிய அரசு உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். பஞ்சாபில் தீா்க்கப்பட வேண்டிய பிரச்சனை கள் அதிகம் உள்ளன. சீக்கியர் களின் கோரிக்கைகள் பல நிறை வேற்றப்படாமலேயே உள்ளன. இப்போது மாநிலத்தில் திடீரென நிகழ்ந்துள்ள மத அவமதிப்பு சம்ப வங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. நமது நாட்டுக்கு உணவு தேவைப்படும்போது அதனை வழங்கும் நிலமாகவும், எதிரி களின் அச்சுறுத்தல் ஏற்படும் போது வாள் ஏந்தி போராடும் மக்க ளைக் கொண்டதாகவும் பஞ்சாப் திகழ்கிறது. பஞ்சாப்பிற்கு வேளாண்மை சார்ந்த மிகப்பெரிய பொருளாதாரத் திட்டம் தேவை. பிரதமரால் மட்டுமே மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர முடியும். அந்த வகையில் பிரதமரின் பஞ்சாப் பய ணம் மாநில மக்களின் தேவை களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.