tamilnadu

img

சாதி வன்ம வேர்களை அறுக்கும் ஆசிரியர்களின் மேடை - வே. மீனாட்சிசுந்தரம்

1930களில் சிங்கார வேலர், பெரியார், ஜீவானந்தம் துவக் கிய சாதி அழிப்பு  இயக்கத்திற்கு புத்து ணர்வூட்டும் வகையில் பொதுகல்வி இயக்க கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் பேரா சிரியர் பி.ரத்தினசபாபதியும், பொதுபள்ளிக் கான மேடை அமைப்பு மூலம் ஊர்தோறும் சென்று கருத்தரங்கங்கள் நடத்திவருகின்றனர்  “சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்று தலைப்பில் பள்ளி ஆசிரி யர்கள் மாணவர்கள் சாதி ஒழிப்பிற்கு குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் பங்கேற்று கருத்துரை வழங்குவதை புத்தகமாக வெளி யிட்டு வருகின்றனர். பொதுபள்ளிக்கான மேடையின் ஆக்கப்பூர்வமான இந்த கருத்த ரங்கங்கள் பிஞ்சு மனங்களிலே ஒரு பண்பாட்டுப் புரட்சியை உருவாக்கிவருகிறது. “சாதி ஒழிப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்” என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக சிந்தன் புக்ஸ் இதனை வெளி யிட்டுள்ளது. அரசியல்நிர்ணய சட்டத்தை விளக்கும் புத்தகமோவென தலைப்பு தோன்றுகிறது. ஆனால் உள்ளே போன பிறகுதான் கோடிக்கணக்கான பெற்றோர்கள் கையிலே இருக்க வேண்டிய புத்தகமென உணரவைத்துவிடுகிறது. உண்மையில் இந்த தலைப்பிற்கு பதிலாக ”சாதி உணர்வு வன்மமாக எப்பொழுது ஆகிறது? தடுப்பது எப்படி? “மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களின் கருத்துரைகள்” என்று இருந்தால் உயர்வாக இருக்கும் என்று வாசிப்போர் மனதில் படும். 

இதில் 2023 ஆகஸ்ட் அன்று   நான்கு நேரியில் பிஞ்சு நெஞ்சங்களிலே விதைக்கப் பட்ட பட்டியலின சாதியின மாணவனும், மாண வியும்   கொடூர தாக்குதலுக்குள்ளாகியும், அவர்களது உற்றார் உயிரிழப்பும் பற்றிய தகவல்களை பிரின்ஸ் கஜேந்திரபாபு, கள ஆய்வு செய்து கண்டதை அரசின் கவனத்திற் கும், அக்கறையுள்ள அரசியல் தலைவர்க ளுக்கும் கடிதமாக அணுப்பியதை பதிவு செய்துள்ளார் இந்த பதிவு ஊடகங்களும், காவல்துறை யும் இதுபற்றி பரப்பிய செய்திகளும், குற்றவாளிகளை அடையாளப்படுத்துவ திலும் கையாண்டதை பரிசீலிக்க வைக்கி றது, 1794  ஆண்டு நவீன இந்தியவியலுக்கு விதை போட்ட  சர் வில்லியம் ஜோன்ஸ், மனு ஸ்மிருதியின் மொழிபெயர்ப்புக்கான தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்:“இந்தக் கொள்கை பின்பற்றப்பட்டால், “பல மில்லியன் இந்து குடிமக்களின்” “நன்கு நெறிப்படுத்தப்பட்ட தொழில்” “பிரிட்டனின் செல்வத்தை பெருமளவில் சேர்க்கும்” என்கிறார்.  விடுதலைக்கு முன் சிங்காரவேலர் பெரியார் ஜீவானந்தம் துவக்கிய சாதி அழிப்பு இயக்கம் விடுதலைக்குப்பிறகு அரசியல் கார ணங்களால் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டது.   அன்று அதற்கு உயிரோட்டமாக இருந்தவர்கள் மார்க்சிஸ்ட் இயக்கத்தினரும் ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுமேயாவர் அந்த ஆசிரியர்கள், பிஞ்சு மனதிலே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பார்வையை விதைத்தனர். சிறு வயதிலேயே பரந்த இதயத்தை கொடுத்தனர். 

வேர்வை சிந்தும் உடலுழைப்பை கேவலமாகக் கருத வைக்கும் வேத பார்பனீயத்தை வெறுக்க வைத்தனர். அன்று தீண்டாமை கொடுமையை  அழிப்பே சாதி அழிப்பின் உயிர் நாடி என்ற கருத்தே இயக்கியது. பொதுபள்ளிக்கான மேடை அமைப்பு ஆசிரியர்கள் மாணவர்களை சாதிஒழிப்பி ற்கு இயங்கு சக்தியாக ஆக்கி தனது கடமையை செய்கிறது. அரசில் தலைவர்கள் அவர்களது கடமையைச் செய்ய இப்புத்த கம் வேண்டுகிறது. இந்த புத்தகம் சமூகத்தின் கருத்தாக மாறினால் அதுவே அரசியல் தலைவர்களின் கடமையை உணரவைக்கும்.

சாதி ஒழிப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்,
வெளியீடு: சிந்தன்புக்ஸ், 
விலை : ரூ.225,
கைபேசி : 9445123164, 
தொலைபேசி : 04428114164