* திட்டக் கமிஷனை மீட்டெடுக்க வேண் டும்.
* வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வளர்ச்சியை ஒருங்கிணைத்து, முழு வேலைவாய்ப்பையும், மக்களின் கைகளில் பணப் புழக்கம் உருவாக்கி, தேவையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
* பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியோரின் லாபங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் ஆதார வளங்களின் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும்.
* விவசாய உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்தில் பொது முதலீடுகளை அதிகரித்தல்.
* மின்சாரம், பொதுப் போக்குவரத்து, துறைமுகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது மருத்துவமனைகள் போன்ற உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கு பொது முதலீட்டிற்கு போதுமான வள ஆதாரங்களை ஒதுக்குதல்.
* வெகுஜன நுகர்வுக்கான பொருட்களை உற்பத்தி செய்வதை ஆதரிக்க வேண் டுமே தவிர, நீடித்து நிலைக்காத ஆடம் பரப் பொருட்களை அல்ல.
* விதைகள், உரங்கள், மின்சாரம்/ டீசல் போன்ற விவசாய இடுபொருட்களுக் கான பொது வழங்கல் மற்றும் மானியங்கள்.
* அதிக வேலைவாய்ப்பை வழங்கும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் சிறப்பு முயற்சிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்.
* நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் சமூகத் துறை செலவினங்களுக்கு குறைந்த பட்ச தளத்தை அமைத்தல் - இவை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான நிதி நடைமுறையினை கட்டுப்படுத்துவதாக இருக்கும்.
* பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு மேலும் நீர்த்துப்போவதை தடுத்து நிறுத்தி, முன்னுரிமைத் துறை கடன் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பொதுத் துறையை வலுப் படுத்த வேண்டும்.
* நிதித்துறையின் அனைத்து ஒழுங்கமைவுப் பிரிவு அதிகாரிகளும் கட்டாயமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங் களின் கண்காணிப்புக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
* தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பொருளாதார முடிவுகளில் மாநில அரசுகளை ஈடுபடுத்துதல், மாநிலங்களின் முடிவெடுக்கும் அதிகாரங்களை மீட்டெடுத்
தல் மற்றும் மாநிலங்கள் வருவாய் திரட்டுவதற்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை அனுமதித்தல்.