காவலர் முத்துக்குமார் கொலையில் தேடப்பட்டு வந்தவர் என்கவுண்ட்டர்! கம்பம் அருகே போலீசார் சுட்டுக் கொன்றனர்
தேனி, மார்ச் 29 - தேனி அருகே உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர், என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உசிலம்பட்டி அருகேயுள்ள கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமாா் (34). உசிலம்பட்டி காவல் ஆய்வாள ரின் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவர், கடந்த வியாழக்கிழமையன்று அருகிலுள்ள முத்தையன்பட்டி மதுக்கடை அருகே, தனது நண்பர் ராஜாராம் என்பவருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அங்கு, கஞ்சா வழக்கில் சிறைசென்று ஜாமீனில் வந்திருந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பொன்வண்ணன் என்ப வரும் நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே துவங்கிய பேச்சு, ஒருகட்டத்தில் தகராறாக மாறி யுள்ளது. இதில், முத்துக்குமாரின் நண்பர் ராஜாராமையும் கடு மையாகத் தாக்கியதோடு, பொன்வண்டும், அவரது நண்பர் களும் சேர்ந்து காவலர் முத்துக்குமார் மீது கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படு கிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து, பொன்வண்ணனை போலீசார் தேடி வந்த நிலையில், அவர், தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், உசிலம்பட்டி நகர காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு சென்ற தாகவும், போலீசாரைக் கண்ட பொன்வண்ணன் அவர்களை தாக்க முயன்றதாகவும், அப்போது, தற்காப்புக்காக போலீ சார் துப்பாக்கியால் சுட்டதில், பொன்வண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.