tamilnadu

img

உழைக்கும் மக்களிடம் உண்டியலேந்தி செல்கிறோம்!

கடந்த டிசம்பர் 25 இல் துவங்கி இருவாரங்களில் 1423 குழுக்கள் ஒன்றரை லட்சம் வீடு களுக்குச் சென்றதில் ரூ.27 லட்சத்து 13 ஆயிரத்து 845 நிதி குவிந்தது. இன்னும் பொங்கல் திருநாள் வரையில் 50 ஆயிரம் வீடுகளுக்கு செல்ல உள்ளோம். ‘சிலிண்டர் என்னமோ இலவசமா கொடுத்தாங்க. கேஸ் விலை கூடியதால் சிலிண்டர் அடுப்பு எரியல. எங்க வயிறு தான் எரியுது’ என விலை உயர்வால் தங்களது அன்றாட வாழ்வின் நெருக்கடியை பலரும் வெளிப்படுத்தினர். ‘கஷ்டப்பட்டு படிக்க வைச்சோம். எங்க பையன் சென்னையில இருக்கான். நல்ல வேலை கிடைக்கல,  மாசம் ரெண்டாயிரம் ரூபா நாங்க தான் அனுப்புறோம். எங்க கஷ்டம் எப்பத்தான் தீருமோ?’ என்ற குரலில் வேலையின்மையின் அவலம் வெளிப்பட்டது.

சந்தித்த வீடுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் நூறு, இருநூறு சதுர அடிக்குள் ஓரிரு அறையில் வாழ்க்கை நடத்தும் நிலைமை. திண்ணையில் வசிக்கும் ஒரு மூதாட்டி சொன்னது: ‘எனக்கு ரெண்டு  பிள்ளைங்க, ரெண்டு பேருக்கும் திருமணமாயிடுச்சு. எங்க வீட்டுக்காரரு இறந்து போனாரு. இது எங்க பூர்வீகத்து வீடு. இருக்கிற நிலைமையில வாடகை கொடுத்து வாழ  முடியாது. அதனால, இந்த சின்ன  வீட்டுக்கு ஊடால சுவரு வைச்சு ரெண்டு  பிள்ளைகளுக்கும் கொடுத்துட்டேன். நான் இந்த திண்ணையில இருக்கேன்’  என்றார். வாடகை வீடுகளில் வசிப்போர் தங்களது குறைந்த வருமானத்தில் பாதியை வாடகைக்கே கொடுத்து விட்டு பாதியை அரை வயிறு சாப்பிட்டே அன்றாடப் பொழுதை கழிப்பதாக சொல்வதைப் பார்த்தோம். ரோடு மோசமா இருக்கு, சாக்கடைத் தேங்கிக் கிடக்கு, தெரு விளக்கு எரியல, ஓட்டு வாங்கிப் போன வங்க என்னன்னு கேட்கல. நீங்கதான் கேட்கணும் எனும் மக்களின் குரலை  உடனுக்குடன் அதிகாரிகள் கவ னத்திற்கு எடுத்துச் சென்று பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டது.

விருதுநகர் பாத்திமா நகரில் உப்புத் தண்ணீர்தான் வருகிறது. குடிக்க முடியல என பல பெண்கள் குமுறிய நிலையில் மக்களைத் திரட்டிச் சென்று நகராட்சியை முற்றுகையிட்டு நல்ல குடிநீர் தர வைக்க முடிந்தது. வறுமை நிலையில் இருந்தாலும் நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக போராடுபவர்கள். பட்டாசு ஆலைகள் அடைக்கப்பட்டபோது திறக்கச் சொல்லியும், வெடி விபத்து ஏற்பட்ட  போது இழப்பீடு பெற்றுக் கொடுத்தும், தொழிலையும், தொழிலாளர் உரிமைகளையும் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர்கள். நூறு நாள் வேலை கேட்டும் வேலை செய்த கூலி கேட்டும் விவசாயி களின் கடன் தள்ளுபடிக்காகவும் தொடர்ந்து தலையிட்டவர்கள். அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டியுள்ள ஏழைகளின் வீடுகளை இடிக்க வந்த போது, செங்கொடியோடு வந்து தடுத்து நிறுத்தியவர்கள். மார்கழி மாதமென்பதால் சபரிமலை, பழனி, திருச்செந்தூர் செல்லும் ஆண்களும், மேல்மரு வத்தூர் செல்லும் பெண்களும் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை செலுத்த வைத்திருந்த தொகையில் இருந்து எடுத்து  நமது உண்டியலில் செலுத்தினர். சாமானிய மக்களைப் பொறுத்த வரையில் அய்யா பாலபிரஜாபதி அடிகள் குறிப்பிடுவது போல ‘கட வுளும் கம்யூனிஸ்டுகளும் ஒன்று தான்’ என நினைக்கிறார்கள். மக்களிடம் மேலும் நெருக்கமாகச் செல்வோம்.. மனித மனங்களை வெல்வோம்..

-கே.அர்ஜூனன் விருதுநகர் மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)