tamilnadu

img

5 நாட்களில் 42,862 புகார்கள் : பினராயி விஜயன் தகவல்

கல்பற்றா, நவ. 25 - “புதிய கேரள அரங்கில் ஐந்து நாட்களில் 16 மையங்களில் 42 ஆயி ரத்து 862 மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ‘மக்கள் அளிக்கும் மனுக் களுக்கு தீர்வு காணப்படவில்லை’ என்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு எந்த அடிப்படையில்?” என்று முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி யுள்ளார். ‘புதிய கேரள அரங்கு’ எனும் மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தை பினராயி விஜயன் அரசு நடத்தி வருகிறது. இதற்கு கேரள மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இத்திட்டம் குறித்து வழக்கம்போல அவதூறுகளை அள்ளி வீசும் நிலையில், அவற்றுக்கு முதல்வர் பினராயி விஜயன் பதி லடி கொடுத்து வருகிறார். அதனொரு பகுதியாக அவர் கூறியிருப்பதாவது: “கண்ணூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 630 மனுக்களும், காசர்கோட்டில் 14 ஆயிரத்து 232  மனுக்களும் வந்துள்ளன. இவற்றைச் சரிபார்த்து, தீர்வை உறுதி செய்யும் அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையால் மனுக்களுடன் மக்கள் வருகின்றனர். கடந்த (இடது ஜனநாயக முன்னணியின் 2016 முதல் 2021 வரை யிலான) ஆட்சிக் காலத்தில் தொடங் கப்பட்ட குறை தீர்க்கும் பிரிவில், 5  லட்சத்து 40 ஆயிரத்து 722  மனுக்கள் பெறப்பட்டன. 5 லட்சத்து 36 ஆயிரத்து 525 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள 4,197 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ‘கருதலும் கைதாங்கும்’ என்னும் தாலுகா அள விலான அதாலத்தில் மட்டும் 76  ஆயிரத்து 551 மனுக்கள் பெறப்பட் டன. அவற்றில் 69 ஆயிரத்து 413 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டன. மீதமுள்ள 7 ஆயிரத்து 138 மனுக்கள் விசாரணையில் உள்ளன. ‘புதிய கேரளம் அரங்கு’ இப்படி பயணிக்கும்போது நிர்வாகம் செயலற்று விடாதா? என்று முத லில் சிலர் கேட்டனர். அதற்கு நிர்வா கம் முறையாக நடந்து வருகிறது. தலைமைச் செயலகம் வழக்கம் போல் செயல்படுகிறது. பய ணத்தின் நடுவே அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்று  பதிலளிக்கப்பட்டது. உடனே, ஹோட்டல் அறையில் அமைச்சர வை கூட்டம் நடத்தப்படுவதா? என்று புதிய குற்றச்சாட்டை எழுப்பு கின்றனர். பால் கறக்கும் முலைக்காம்புகளிலும் கொசுக்கள் இரத்தத்தை தேடும் என்பதுபோன்ற செயல் இதுவாகும். இதுபோன்ற மலிவான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை.” இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.