புதுதில்லி, ஜன.29- பெகாசஸ் மென்பொருள் இந்திய மக்களின் பணத்தை கொண்டு இந்திய ஜனநாயகத்தை அழிப்பதற்காக மோடி அரசினால் வாங்கப்பட்டுள் ளது. தேர்தல் ஆணையம், அரசியல் தலைவர்கள், உச்சநீதிமன்றம் மற் றும் அரசு அதிகாரிகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையான விசா ரணை நடத்தப்பட வேண்டும். இந்த செயல் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. இதற்கு காரணமான மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி வலியுறுத்தியுள்ளார். இந்த உளவு ஆயுதத்தை வாங்கி யது குறித்து மோடி அரசு விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட சிலரை குறிவைத்து உளவு பார்க்க இந்த மென்பொருள் பயன்படுத்தப் பட்டது குறித்து விளக்க வேண்டும். இந்த முக்கியமான தருணத்தில் மௌனம் சாதிப்பது என்பது இந்த கிரிமினல் நடவடிக்கையை ஏற்றுக் கொள்வது போலாகிவிடும். எனவே அனைவரும் கடும் எதிர்ப்பு தெரி விக்க வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஏடு அம்பலப்படுத்தியது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் பெகாசஸ் குறித்த சர்ச்சையில் மீண் டும் சிக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. 2017-ஆம் ஆண்டிலேயே இஸ்ரேலுக்கும்-இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் உள வுத்துறை சார்ந்த கருவிகள் முக்கியப் புள்ளியாக இருந்தது தெரியவந் துள்ளது. 2017-ஆம் ஆண்டு இந்தியா- இஸ்ரேலுக்கு இடையே சுமார் இரண்டு பில்லியன் (200 கோடி) டாலர் ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மற்றும் ஏவுகணை அமைப்பு ஆகியவை அதி நவீன ஆயுதங்கள் மற்றும் உள வுத்துறை கருவிகள் “மையப் புள்ளி களாக” இருந்தன என்று ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட் டுள்ளது. உலக அளவில் 50,000 கைபேசி களில் பெகாசஸ் ஸ்பைவேர் ஊடு ருவியுள்ளதாக, அம்னெஸ்டி இண் டர்னேசனல் அமைப்பும், பார்பி டன்ஸ் ஸ்டோரிஸ் நிறுவனமும் வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. இந்த பட்டியலில் 14 உலக நாடு களின் தலைவர்களின் கைபேசி எண் களும் உள்ளன. மூன்று ஜனாதிபதி கள், 10 பிரதமர்கள் மற்றும் ஒரு மன்னர் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், அரசி யல்வாதிகள் மற்றும் பிறரை உளவு பார்க்க சில அரசாங்கங்கள் பெகா சஸ் மென்பொருளைப் பயன்படுத்தி யது. இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் டைம்ஸ், ‘உலகின் மிகவும் சக்திவாய்ந்த சைபர் ஆயு தத்திற்கான போர்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஒ குழுமம் கிட்டத்தட்ட கடந்த பத்தாண் டுகளாக அதன் கண்காணிப்பு மென் பொருளை சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு சந்தா அடிப்படையில் விற்பனை செய்து வருகிறது என்று கூறி யுள்ளது.
வேறு யாராலும் செய்ய முடியா ததை ஒரு தனியார் நிறுவனம் மட்டு மல்ல ஒரு மாநில புலனாய்வுத்துறை கூட செய்ய முடியாது என்று என்எஸ்ஒ குழுமம் உறுதி செய்கி றது. இது ஐபோன் அல்லது ஆண்ட் ராய்டு ஸ்மார்ட்போனின் மறைகுறி யாக்கப்பட்ட தகவல் தொடர்புகளை தொடர்ந்து சிதைத்துள்ளது. இந்தத் தருணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரே லுக்குச் சென்றதையும் அங்கு பிரத மர் மோடியும் இஸ்ரேல் பிரதமர் (அப்போதைய பிரதமர்) பென்ஜமின் நெதன்யாகுவும் கடற்கரையில் வெறும் கால்களில் நடந்தனர். இவர் களின் சந்திப்பும் சில கேள்விகளை யெழுப்பியுள்ளது. அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப் பந்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந் தத்தில் பெகாசஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவுக்குப் பயணம் மேற் கொண்டார் என அறிக்கை கூறு கிறது. இதன்பிறகு, “2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆத ரவு தெரிவிக்கும் வகையில், பாலஸ் தீனிய மனித உரிமை அமைப்பு ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் எப்பிஐயும் பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள் ளது. இதுபற்றி கருத்து கேட்க பிடிஐ செய்தி நிறுவனம் அரசைத் தொடர்பு கொண்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக உடனடியாக எந்தப் பதி லும் கிடைக்கவில்லை. இந்த விவகாரம் இந்தியாவில் பூதாகரமானது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றி லும் பெகாசஸ் விவகாரத்தால் முடங் கியது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க உச்சநீதி மன்றம் நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழு அமைக்க கோரிய மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையி லான அமர்வு விசாரித்தது.
மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட விவகாரத்தில் அனைத்து தக வல்களையும் நீதிமன்றத்திற்கும், மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஒன்றிய அரசு குழு அமைக்க அனு மதிக்கக்கூடாது. அமைக்கப்படும் குழு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என வாதிட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதி பதி ரமணா தலைமையிலான அமர்வு 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து உத்த ரவிடப்பட்டுள்ளது. அதில் ரா பிரிவின் முன்னாள் இயக்குனர் அலோக் ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஒபராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர் பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, இந்தியாவின் ரகசியத்தை காப்பது முக்கியம். தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகளும் முக்கியம். பத்திரிகையாளர் மட்டு மின்றி அனைத்து மக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். சிறப்பு நிபுணர் குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ராகுல்காந்தி
இப்பிரச்சனையில் ஒன்றிய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். நரேந்திர மோடி அரசு நமது ஜனநாயகத்தின் முதன்மையான நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக பெகாசஸை ‘வாங்கியது’ என்று குற்றம் சாட்டி யுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட் டர் பதிவில், “நமது முதன்மை ஜன நாயக நிறுவனங்கள், அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்கள் மீது உளவு பார்க்கவே மோடி அரசு பெகாசஸ் செயலியை வாங்கியுள் ளது. அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆயுதப்படை, நீதித் துறை என அனைவரும் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்புகளால் குறிவைக்கப்பட்டனர். இது தேசத்துரோகம். மோடி அரசு தேசத் துரோகம் செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.