தலசேரி, மார்ச் 6- கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிதானத்தை பலவீனமாக பார்க்கக்கூடாது என்றும், வலிமையான கட்சியால் மட்டுமே நிதானத்தை கடைபிடிக்க முடியும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேரி பால கிருஷ்ணன் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் வெட்டிக் கொல்லப்பட்ட புன்னோல் ஹரிதாசன் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய கொடியேரி, ஹரிதாசன் படுகொலை யின் வலியைத் தாங்கிக்கொண்டு அமைதி யை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட முடியும் என்றும், கலவரத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் நடவடிக்கையில் யாரும் சிக்கிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் அவர் கூறியதாவது: ஹரிதாசன் படுகொலை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய திட்டமிட்ட கொடுஞ்செயல். இதற்கான திட்டமிடல் ஏற்கனவே நடந்துள்ளது. இதற்கென பயிற்சி பெற்ற கொலைகார கூலிப்படை அமைக்கப் பட்டுள்ளது. ஹரிதாசனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது மற்றும் இடுப்புக்கு கீழே 20 க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற் பட்டுள்ளன. இந்த கொலையின் பின்னணியில் உயர்மட்ட திட்டமிடல் உள்ளது. காவல்துறை அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும். அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
கட்சி மாநாடு
மக்கள் நிம்மதியாக வாழும் பகுதியில் ஏழை மீனவர் ஹரிதாசன் கொல்லப்பட்டார். மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தி னர் முன்னிலையில் கொலை செய்து குடும்பத்தினரையும், கிராம மக்களையும் மிரட்ட முயன்றுள்ளனர். கண்ணூரில் கட்சியின் அகில இந்திய மாநாடு நடக்கவிருக்கும் நிலை யில் இந்த கொலை நடந்துள்ளது. சிபிஎம் ஆதர வாளர்கள் கூட தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற செய்தியை இதன் மூலம் கொலையாளிகள் முன்னிறுத்த முயல்கிறார்கள். யாரையும் கொல்வதற்கான கொடூரமான பயிற்சியை ஆர்எஸ்எஸ் வழங்குகிறது. அப்பா, அம்மா என யாரையாவது கொல்லச் சொன்னா லும் கொன்று விடுவார்கள். அதுதான் அவர் களின் வழி. எதையும் செய்யத் தயங்காத ஒரு கும்பலுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். சிபிஎம்மை சேர்ந்த மீன் தொழிலாளர்கள் குறி வைத்து கொல்லப் படுகிறார்கள். மீனவர்களின் தலைவரான தலா யியைச் சேர்ந்த கே.லதேஷ் கொல்லப்பட்டார். பாறாலில் ஆர்எஸ்எஸ் காரர்களால் கொல்லப் பட்ட டி.வி.தாசன் ஒரு மீன் வியாபாரி.
காந்திஜியைச் கொன்ற போதும்…
ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம் படுகொலை கள் மூலம் சட்டத்தின் ஆட்சியை தகர்ப்ப தாகும். அமைதி நிலவும்போது, அவர்களின் ஒவ்வொரு வன்முறையும் யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் வரும். ஒவ்வொரு கொலைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அது பொய் வழக்கு என்றும் ஆர்.எஸ்.எஸ். கூறும். காந்திஜியும் நரேந்திர தபோல்கரும் கொல்லப்பட்டபோதும் இப்படித் தான் கூறப்பட்டது. மிகவும் இக்கட்டான நிலையில் உள்ள ஹரிதாசனின் குடும்பத்தை கட்சி பாதுகாக்கும். கட்சி மாநாட்டிற்குப் காங்கிரஸுக்கு பிறகு தேவையான நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கொடியேரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் களான ஏ.என்.ஷம்சீர் எம்.எல்.ஏ., காராயி ராஜன், எம்.சி.பவித்ரன், சி.கே.ரமேசன், ஏ.சசி ஆகியோரும் கொடியேரியுடன் சென்றனர்.