tamilnadu

‘கள்ளக்கூட்டணி’ என்பது...

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அக்கட்சி யின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசைப் பற்றி ஒரு வார்த்தை  கூட விமர்சிக்கவில்லை” இதுகுறித்து தீக்கதிர் (29.3.2024) “அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி யை மதுரையில் உறுதி செய்த எடப்பாடி” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் கேட்ட னர்.  “பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகும் தமிழ்நாடு முதல்வரும், உதயநிதி ஸ்டாலினும் “கள்ளக்கூட்டணி” என விமர்சிக்கின்ற னர். இதற்குக் காரணம் அவர்களது தோல்வி பயம்தான்” என்று சொன்ன அவர், “கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்து, ஒன்றிய அரசைப் பற்றி விமர்சிக்காமல் இருந்தோம். இப்போது கூட்டணியை விட்டு வெளியேறிய பின் அவர்கள் தவறு செய்தால் உடனடியாக கண்டிப்போம். கூட்டணிக்குள் இருக்கும் அவர்களை விமர்சிப்பது கூட்டணிக்குள்  இருந்து உள்ளடி வேலை செய்வதாகும்” என்று குறிப்பிட்டு, கள்ளக் கூட்டணியை மீண்டும் உறுதி செய்தார்.