tamilnadu

இலவச தேநீர் தர மறுத்த கடை உரிமையாளர் வெட்டிபடுக்கொலை

மதுரை,
 இலவச தேநீர் தர மறுத்த கடை உரிமையாளரை பட்டபகலில் 6 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, பாரதி தெருவில் உள்ள தேநீர் கடையில்  சில இளைஞர்கள் இலவசமக தேநீர் கேட்டுள்ளனர். அதற்கு அந்த  கடை உரிமையாளர் தர மறுத்திருக்கிறார்.உடனே கோபமடைந்த அந்த இளைஞர்கள் கத்தி மற்றும் பாட்டில்களை கொண்டு  கடைகாரர்ரை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர் இதில் கடைகாரர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த படுகொலை குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
இந்த கொலையில் ஈடுபட்ட இளைஞர்கள் கடையின் அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்தததாகவும்,இதுகுறித்து பொதுமக்கள் பல முறை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் அங்குள்ள பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  


 

;