புதுதில்லி, பிப்.3- அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், செவ்வாயன்று 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட் டது. இந்நிலையில், புதனன்று மாநிலங் களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: “நாட்டில் வேலையின்மை பரவலாக அதிகரித்து வருகிறது. பெரும் தொழிற் சாலைகளை மூடி வருவதால் இளை ஞர்கள் துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ள னர். முதலீடுகள் மற்றும் அரசுப் பணி களும் குறைந்து வருகின்றது. 2014ஆம் ஆண்டில் பாஜக வாக்குறுதியில் ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அப்படி யெனில், தற்போது 15 கோடி வேலை வாய்ப்பு கள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இந்தஆண்டு பட்ஜெட்டில் அடுத்த 5ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது’’. இவ்வாறு அவர் கூறினார்.