tamilnadu

சட்டபேரவைக் கூட்டம் தொடங்கியது

சென்னை,ஜன.5- சென்னை தலைமைச் செயல கத்தில் உள்ள சட்டப்பேரவைக் கூட்ட  அரங்கத்தில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால்,  தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், கலைவாணர் அரங்கத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு தொடக்க த்திலும் தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையாற்று வது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல்  சட்டசபை கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தை தொடங்கி வைக்க  புதனன்று (ஜன.5) காலை 10  மணிக்கு கூடியது. கூட்டத்தில் உரை நிகழ்த்துவ தற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.55 மணிக்கு சட்டசபை வந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் சபைக்கு வந்தனர். ஆளுநரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மரபுப்படி சபைக்குள் அழைத்து வந்தனர். முதல்முறையாக தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடி யாக பாடப்பட்டது. தமிழக அரசின் இசைக்கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க துவங்கினார்.