‘இந்தியா’ கூட்டணி உருவாக்குவதற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முயற்சி எடுத்தது. இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது. பேச்சுவார்த்தை, இடப்பகிர்வு வரும்போது ஏற்கெ னவே இருப்பதை அதிகரிக்க முயற்சிப்போம். அதிமுக, பாஜக ஒன்றாக இருந்தபோது எப்படி எதிர்த்தோமோ அதேபோன்று அவை பிரிந்திருந்தா லும் அந்த கட்சிகளை எதிர்த்த போராட்டம் தொட ரும். 9 ஆண்டுகாலம் பாஜக செய்த அனைத்துவித மான துரோகத்திற்கும் அதிமுக உடன்பட்டு நின்றது. தற்போது, எதிர்க்கிறோம், மாறிவிட்டோம் என்று அதிமுக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வரை ஞாயிறன்று சந்தித்து சிறு-குறு தொழில்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட் டோரின் தீர்க்கப்படாத பல கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தியுள்ளோம். நிதானமாக உள்வாங்கிக் கொண்ட முதல்வர் அவற்றை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.