tamilnadu

img

நில உரிமை காத்திட... மாமதுரை அழைக்கிறது - பெ.சண்முகம்,மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

விவசாயிகள் வர்க்கத்தின் உற்ற துணைவனாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23வது மாநாடு வரலாற்றுப் பாரம்பரிய மிக்க மதுரை மாநகரில் மார்ச் 30,31 ஏப்ரல் 1 ஆகிய  தேதிகளில் நடைபெறவுள்ளது. வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற திலும், அப்போராட்டத்தை வெற்றிகரமாக்குவதிலும் முன்னணிப் பாத்திரத்தை வகித்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்பதை எவராலும் மறுக்க முடியாது. கட்சியும், அதன் வர்க்க - வெகுஜன அமைப்புகளும் மிகுந்த மகிழ்வுடனும், உணர்வுப் பூர்வமாகவும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகளின் போராட்டம் வெற்றியடைந்ததில் பூரிப்படைந்தனர். 

10 ஆயிரம் ஏக்கர்  விளை நிலம் காத்திட...

கடந்த மாநில மாநாடு 2018ம் ஆண்டு தூத்துக்குடி யில் நடைபெற்றது. இடைப்பட்ட இந்த நான்காண்டு காலத்தில் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கிற அனைத்து பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணிப் படையாக நின்று கள மாடியிருக்கிறது. எட்டுவழிச் சாலையை அமைத்தே தீருவோம் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி முழங்கினார். 98 சதவீத விவசாயிகள் நிலத்தைக் கொடுத்துவிட்டனர் என்று புளுகினார். ஏற்கனவே, மூன்று சாலைகள் சென்னைக்கு இருக்கும் நிலையில், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தை  அழித்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை யும், வாழ்வாதாரத்தையும் அழித்து, சுற்றுச்சூழலைக் கெடுத்து ஒரு சாலை தேவையா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கியது.  திருவண்ணாமலையிலிருந்து சேலத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பல நூற்றுக்கணக்கான தோழர்கள் நடை பயணம் மேற்கொண்டனர். காவல்துறை கைது செய்து  இரவு பத்து மணிக்கு விடுவித்தனர். மீண்டும் இரவே நடைபயணம் துவங்கியது. மீண்டும் காவல்துறை கைது செய்தது. மறுநாள் மாலை காவல்துறை விடுதலை செய்தது. மீண்டும் நடக்கத் துவங்கினோம். மீண்டும் கைது செய்து மாஜிஸ்ட்திரேட் முன்பு கொண்டு சென்று நிறுத்தினர். நீதிபதி ஜாமீனில் விடுவதாக அறி வித்தார். என்ன குற்றத்திற்காக கைது செய்தார்கள்; நாங்கள் குற்றமே செய்யாத போது எதற்காக ஜாமீனில் விடுதலை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டதில் காவல்துறையினர் திக்குமுக்காடினர். பிறகு நீதிபதி சொந்த ஜாமீனில் விடுதலை செய்கிறோம் என்றார். நாங்கள் ஜாமீனில் செல்ல விரும்பவில்லை; சிறைக்கு  அனுப்புங்கள் என்று கேட்டவுடன் விடுவிக்கிறோம் என்றார்கள். விடுதலை செய்ய அரசு முன்வந்தாலும் விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாக சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து சிறை செல்லவும் தயார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  முன்முயற்சியில் அனைத்து விவசாய சங்கங்களையும், பொதுநல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து கூட்டமைப்பை உருவாக்கி எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தை நீடித்து நடத்தியதும், விவசாயிகளின் நில உரிமையை பாதுகாத்ததிலும் சமரசமற்ற போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

காவிரி டெல்டாவைப் பாதுகாக்க...

அதிமுக அரசு தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டாவை இரசாயன மண்டலமாக அறி வித்தது. அறிவுள்ள எந்தவொரு அரசாங்கமும் இப்படி யொரு அறிவிப்பை வெளியிட்டிருக்க முடியாது. அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் பூமியை ரசாயன பகுதியாக மாற்றுகிறோம் என்று அறிவித்தது. “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும். இங்கு  வாழும் மனிதருக்கெல்லாம்” என்பதை மறந்து கார்ப்பரேட்களின் நலன்களை மட்டுமே கவனத்தில் கொண்ட அறிவிப்பு அது. இந்த அறிவிப்புக்கு முன்பாகவே, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல்கேஸ் எடுப்பது என்ற பெயரில் காவிரி டெல்டாவை காவு  கொடுக்க ஆட்சியாளர்கள் முயற்சித்தனர். இவைகளை  எதிர்த்து விரிவான பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது.  பிறகு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்முயற்சியில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து “காவிரிப்படுகை” பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்டது. இதில் காவிரிப்படுகையை பாது காக்க வேண்டுமென்ற அக்கறையுள்ள அனை வரும் தங்களை இணைத்துக் கொண்டனர். பல்லா யிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. வெகுமக்கள் பிரச்சனையாக இதை மாற்றியதன் விளைவாகத்தான் “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவிக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது. காவிரி டெல்டாவை காப்பதிலும், அங்குள்ள மக்களின் முன்னேற்றத்திலும் பெரும் தியாகத்தையும், வீரம் செறிந்த போராட்டத்தையும் வரலாறு நெடுகிலும் மேற்கொண்டுள்ள கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

நில உரிமை காக்க...

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்தும், கெயில் எரிவாயு குழாய், பெட்ரோலிய குழாய் பதிப்பதை எதிர்த்தும், விவசாயிகளின் நில உரிமை யைப் பாதுகாப்பதில் விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி வருகிறோம். காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்ச னையில் தமிழ்நாட்டு உரிமையைப் பாதுகாக்கும் வகை யில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டு மென்று உறுதியாக குரலெழுப்பி வரும் கட்சி.  இப்படி தமிழ்நாட்டு மக்களின், விவசாயிகளின் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி மார்ச்-30ந் தேதி மாலை பிரம்மாண்டமான பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இப்பேரணியில், விவசாயிகள் பெருமளவு பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும். அருமை தோழர்.கே.பி.ஜானகியம்மாள் அவர்கள் விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகியாக இருந்து செயல்பட்ட மண் அது. முத்திரை பதிக்கத்தக்க பல விவசாயிகள் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் தோழர்.ஜானகியம்மாள். விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக, அகில இந்திய தலைவராக செயல்பட்ட தோழர்.என்.சங்கரய்யா அவர்களின் அரசியல் களம் மதுரை. இத்தகைய பெருமைமிகு தலைவர்களின் அடியொற்றி மதுரையை நோக்கி வருக! மாமதுரை அழைக்கிறது.