tamilnadu

img

ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை

ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை

மதுக்கரை அருகே சிறுத்தை ஒன்று தோட் டத்தில் இருந்த ஆடுகளை வியாழனன்று இரவு சிறுத்தை கொடூரமாக தாக்கியுள்ளது. கோவை, மதுக்கரையடுத்த முருகன்பதி யில், பழைய மந்தை தோட்டத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர், வழக் கம் போல் தனது தோட்டத்தில் ஆடுகளை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார். இதை யடுத்து வெள்ளியன்று காலை ஆடுகளை  பார்க்க வந்தபோது ஒரு ஆடு தாக்கப்பட்டு  இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந் தார்.  இது குறித்து வனத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்து றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கால் தடங்களை ஆய்வு செய்தனர். இது சிறுத் தையின் தாக்குதல் என உறுதி செய்யப்பட் டால் அதனைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். மேலும், இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் எனவும், தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என வும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சிறுத் தையின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி யினர் தெரிவித்து வருகின்றனர். இதனால், வனத்துறையினர் ரோந்துப் பணியை தீவிரப் படுத்த வேண்டும் எனவும், சிறுத்தையைப் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வும் வலியுறுத்தியுள்ளனர். சிறுத்தையின் தாக்குதலால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுவதால் வனத்துறையினர் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.