மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை - செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர் எஸ்.வி.எஸ்.மணியும், அவரது மனைவி எஸ்.பத்மாவதியும் தங்களது இல்லத்தை கட்சிக்கு உயிலாக எழுதி வைத்தனர். தோழர் எஸ்.பத்மாவதி மறைவைத் தொடர்ந்து அவரது படத்திறப்பு நிகழ்வு வெள்ளியன்று (ஜூன் 28) கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் (தோழர் எஸ்.வி.எஸ்.மணி நினைவகம்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உயில் ஆவணத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், வழக்கறிஞர் ப.ராஜேந்திரன் வழங்கினார். அருகில் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் உள்ளிட்டோ உள்ளனர்.