பாட்னா நடந்து முடிந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தல் முடி வில் “இந்தியா” கூட்டணி 10 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற நிலையில், பாஜக 2 வெறும் தொகுதிக ளில் மட்டுமே வென்று மண்ணை கவ்வியது. முக்கியமாக பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் உள்ள ரூபாலி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம், பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைந்தது. இந்த விவகாரம் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி பாராட்டு தெரிவித்த விவகாரம் பீகார் பாஜக கூட்டணியில் மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.