tamilnadu

உலகப்போரில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு

இட்டா நகர்,ஜன.25- இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த  நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்தியா, சீனா மற்றும் மியான்மர்  போன்ற நாடுகளில் விழுந்து  காணாமல் போனது.   அந்த வகையில் சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமா னம் புறப்பட்ட சில மணி நேரங்களில் ரேடாரு டனான தொடர்பை இழந்து மாயமானது. இந்நிலையில், மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்த விமா னத்தில் பயணம் செய்த ஒருவரின் மகனான  நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்பவர் ஈடுபட்டிருக்கிறார். அந்த நபர், விமான தேடுதல் பணியை அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார்.  அதன் அடிப்படையில் தனது குழு வினருடன் குக்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.  இந்த பய ணத்தில் குக்லெஸ் உடன் உள்ளூர் வழிகாட்டி கள் குழுவும் இணைந்தது.   கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய பகுதியில் கிடந்த  போர் விமான பாகத்தை இந்தகுழு கண்டு பிடித்தது. பனி படர்ந்தபாறைகளுக்கு நடுவே விமான வால்பகுதியில் இருந்த  குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்ததாக கிளேட்டன் குக்லெஸ் தெரி வித்துள்ளார். விமானம் காணாமல் போய் 77 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.