tamilnadu

img

ஆதிகேசவ பெருமாள் கோயில் விழாவில் மாற்று மதத்தினரும் பங்கேற்கலாம்

மதுரை, ஜூலை 4 - திருவட்டாறு ஆதிகேசவ பெரு மாள் கோயில் கும்பாபிஷேக விழா வில் மாற்று மதத்தினர் பங்கேற்க தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்  நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குமார கோவில் பிரம்மபுரத்தை சேர்ந்த சி.சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், “திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயி லில் ஜூலை 6 ஆம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது. கும்பாபி ஷேக விழாவுக்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப் பட்டுள்ளது. பொதுவாக குமரி மாவட்ட கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய முடியாது. ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் தான் பூஜைகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க முடியும். அங்கீகரிக்கப் பட்ட பூசாரிகள் மட்டுமே பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்த  வேண்டும். இந்நிலையில், கும்பாபி ஷேகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது. அமைச்சர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர். கும்பாபிஷேக விழா அரசு  விழாவாக நடைபெறும் போது, வழக்கமான சம்பிரதாயங்கள் கடைப் பிடிக்கப்படாமல் கோயிலின் புனிதம் கெடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் கும்பா பிஷேக விழாவில் கோயில் வளா கத்தில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனு மதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, “இந்துக் கோயில் களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் கோயில்களின் முன்பு  வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை விதிகளில் சொல்லப்படவில்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்கு செல்லும்போது, அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பிரபல பாடகர் யேசுதாஸ் வேறு  மதத்தை சேர்ந்தவர்தான். இருப்பி னும் அவர் ஏராளமான இந்து கட வுள் பாடல்களை பாடியுள்ளார். அவ ரது பாடல்கள் கோயில்களில் ஒலிக்கப் படுகின்றன. வேளாங்கண்ணி தேவா லயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழி பட்டு வருகின்றனர். எனவே இந்த  விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய  பார்வையில் அணுக விரும்ப வில்லை. பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.