tamilnadu

சட்டம்,காவல்துறையை மதிக்கமாட்டீர்களா? பாஜக பிரமுகர் கல்யாணராமனை சரமாரியாக கண்டித்த உயர்நீதிமன்றம்

சென்னை,மார்ச் 9- வெறுப்புணர்வோடு பேசிவரும்  பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு ரிய கருத்து பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை கடந்த அக்டோபரில் கைது செய்தது. கோபி நாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்யப்பட்டது. பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்தநிலையில் தன் மீதான வழக்கை  ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் கல்யாணராமன் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு  விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி,  பாஜக பிரமுகர் கல்யாணராமன் நீதிமன்ற த்தை மதிக்க மாட்டார், காவல்துறையை மதிக்க மாட்டார், சட்டத்தை மதிக்க மாட்டார்.அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என  கண்டனம் தெரிவித்தார்.  புகாரை மட்டும் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள் ளது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். கல்யாணராமனின் கோரிக்கை குறித்து 4 வாரத்திற்குள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே மனுதாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏற்கனவே மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வெறுப்புணர்வோடு பேசமாட்டேன் என்று மனுத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் பேசுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.நீதிமன்ற உத்தரவை அவர் மதிப்பதில்லை. இவரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.   மத மோதலை உருவாக்கும் விதமாக பேசுவ தால் அவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது சரிதான் . எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.