மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் என்.வரதராஜன் நினைவுதினத்தையொட்டி வியாழனன்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர். கட்சியின் மாநிலக் குழு அலுவலகம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தோழர் என்.வரதராஜன் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.