சென்னை, செப் 18 - மாநில பல்கலைக் கழகங்க ளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாநில பல்கலைக்கழகங் களை பாதுகாக்க வலியுறுத்தி ஞாயிறன்று (செப்.17) சென்னை யில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கருத்தரங்கில், பல்கலைக்கழகங்களில் சுயேட்சையான செயல்பாட்டை பாதுகாக்க வேண்டும், மாநில பல்கலைக் கழகங்களில் வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநரின் தன்னிச்சையான போக்கை கைவிட வேண்டும். அந்தந்த பல்கலைக் கழகங்களுக்கென்று உள்ள சட்ட விதிகளின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும், நிதிக் குறைப்பை கைவிட வேண்டும். பல்கலைக் கழகங்கள் கோருகிற நிதியை தேவையான அளவு வழங்க வேண்டும். அண்ணா மலை பல்கலைக் கழகத்தில், பிற அரசு பல்கலைக் கழகங்களை போல கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். தரமான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்கள் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில், 17 பேர் கொண்ட மாநில பல்கலைக்கழக உபகுழுவின் ஒருங்கிணைப் பாளராக சி.மிருதுளா தேர்வு செய்யப்பட்டார்.