புதுச்சேரி, டிச.11- பட்டினி இல்லாத புதுச்சேரியை உருவாக்க அரசு முயற்சி செய்கிறது என ஆளுநர் தமிழிசை தெரிவித் துள்ளார். பாரதியாரின் 140 வது பிறந்த நாள் விழா சனிக்கி ழமை (டிச.11) கொண்டாடபட்டது. இதையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ‘தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சொன்னார் பாரதி. அப்படி ஒரு பசுமையான புதுச்சேரியை, பட்டினி இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த 10 ஆண்டுகள், ஒரு வளர்ச்சியடைந்த நாட்டை, புதுச்சேரியை உருவாக்க கனவு கண்டார். அத்தகைய புதுச்சேரியை உருவாக்க பாரதியின் பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம். பாரதியார் அவரது வாழ்நாளில் 10 ஆண்டு கள், மூன்றில் ஒரு பங்கு புதுச்சேரியில் கழித்திருக்கிறார். புதுச்சேரியில் பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு இத்த கைய முயற்சியில் நாங்களும் எங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருக்கிறார் கள். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.