tamilnadu

img

இரு மொழிக்கொள்கையில் திமுக அரசு உறுதியாக உள்ளது

சென்னை, மே 1 இரு மொழிக்கொள்கை யில் தி.மு.க அரசு உறுதி யாக உள்ளது என்று உயர் ்கல்வித்துறை  அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள் ளார். தி.மு.க மாணவரணி சார்வில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெற்றது.  இந்த மாநாட்டின் இரண்டாம் அமர்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில்,  “நாம் இங்கு கூட்டாட்சியுடன் இருக்கி றோம். ஆனால் இங்கு ஆளு நர்கள் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகின்றனர். மாநி லங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக எந்த ஆளு நரும்இல்லைஆட்டுக்கு தாடி எதற்கு என்பது போல மாநிலத்திற்கு எதற்கு ஆளுநர் என்று கேட்கிறோம். இருமொழி கொள்கை ஆங்கிலமும், தமிழும் போதும் என்பதுதான் நம் நிலை. கல்லூரியிலும் தமிழ் வழியில் படிக்கலாம் என்ற நிலையைக் கொண்டு வந்த வர் கலைஞர். புத்தகப் புழு வாக மனப்பாடம் செய்து படிக்கும் சூழல் இருக்கிறது அதனால் தான் நம் முதல்வர் நீங்கள் சமூக அறிவை பெற வேண்டும் உங்கள் திறமை யை வளர்க்க வேண்டும் என்ப தற்காகத் தான் ‘நான் முதல்வன்’என்ற திட்டத் தைத் தொடங்கி வைத்தார். மாவட்டம் தோறும் கல்லூரி தோறும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடை பெற வேண்டும். அப்போது தான் மாணவர்களின் சிந்தனை மாறும். இந்தி படித் த்தால் வேலை கிடைக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் வடமாநிலதில் `இந்தி படித்த பலர் இங்கு வந்து பானி பூரி விற்று கொண்டிருகின்றனர். பல்வேறு தேசிய இனங் கள் வாழும் நாடு இது ஆனால் ஒரு நாடு ஒரே மொழி, ஒரே மதம் என்று செயல்படுத்தத் திட்டமிடு கிறார்கள்அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மொழி கொள்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள் ளார்.