tamilnadu

img

‘தில்லி விவசாயிகள் இயக்கம்: வரவிருக்கும் காலத்திற்கான ஒளிவிளக்கு’ நூல் வெளியீடு...

எழுத்தாளர் வீ.பா.கணேசன் மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘தில்லி விவசாயிகள் இயக்கம்: வரவிருக்கும் காலத்திற்கான ஒளிவிளக்கு’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (ஜன.14) 46வது சென்னை புத்தக் காட்சியில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் வெளியிட, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் வீ.பா.கணேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.