tamilnadu

உலகச் செய்திகள்

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமெரிக்கா வும், உக்ரைனில் தற்போதுள்ள அரசுமே பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டும் என்று உக்ரைனின் முன் னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் வலியுறுத்தி யுள்ளார். அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு பணி யாததால் 2014 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக ஆட்சியிலிருந்து யானுகோவிச் தூக்கி எறியப் பட்டார். உக்ரைன் நலனை விடுத்து, அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பது இலக்காக மாறியதால் தான் தற்போதுள்ள நிலைமை உருவானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் என்ற அமைப்பு எச்சரித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் உடனடி யாக 35 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. கடுமையான வறுமையால் லட் சக்கணக்கான குடும்பங்கள் வாடிக் கொண்டிருக்கின் றன. ஐ.நா. அமைப்பு சந்தித்த சில குடும்பங்கள் தங்கள் வறுமையைச் சுட்டிக்காட்டி, ஊட்டச்சத்திற்கு நாங்கள் எங்கே போவது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக தெற்கு சூடானின் ராணுவ வீரர்களுக்கான 31 லட்சம் மருத்துவ முகக்கவசங்களை சீனா அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் எட்டப் பட்ட உடன்பாட்டின்படி, புதிய ராணுவத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 2023ல் இவர்கள் நாட்டின் பாது காப்புக்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள். பல்வேறு பயிற்சி மையங்களில் சுமார் 83 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்காகவே இந்த முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.