tamilnadu

உலகச் செய்திகள்

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நடப் பாண்டில் 150 கோடி அமெரிக்க டாலர் மதிப்பி லான எண்ணெய் வர்த்தகம் அதிகமாக இருக்கும் என்று ஈக்குவடார் எதிர்பார்க்கிறது. பொதுவாக மற்ற நாடுகளின் எண்ணெய் விலையை விட ஈக்குவடாரின் எண்ணெய் விலை குறைவாகவே இருக்கும். இருந்தாலும் தற்போதுள்ள நிலையால் வர்த்தகம் அதிகரிப்பதோடு, வருமானம் பெரிய அளவில் உயரும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி கில்லர்மோ லஸ்ஸோ கூறியுள்ளார்.

தற்போது நடந்து வரும் மோதலில் ரஷ்யாவின் பக்கம் தாங்கள் சாய்ந்து விடவில்லை என்றும், அந்த நெருக்கடியில் தங்கள் பங்கு எதுவும் இல்லை என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். பிரச்சனையை அமைதியாகத் தீர்க்க வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடாகும். துவக்கத்திலிருந்தே அதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதிகார மட்டத்தில் ஒருபுறம் அதிகமாக அதி காரம் குவிந்திருப்பதால், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று மெக்சிகோ கோரியுள்ளது. தற்போது பாதுகாப்பு கவுன்சில் இயங்கி வரும் தன்மையில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என்று வலி யுறுத்தியுள்ள மெக்சிகோ, சில திருத்தங்களையும் முன் மொழிந்துள்ளது.