tamilnadu

img

சிபிஎம் சட்டப் போராட்டம் வெற்றி

புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டி யில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை மூடுவதற்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழக காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயற்சி தளம்உள்ளது.  இங்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் தனித் தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடு பட்டுள்ளனர். இங்கிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதில், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த கூலித் தொழிலாளி கலைச்செல்வனின் மகன் கே.புகழேந்தியின்(11) தலை யில் பாய்ந்தது. ஆபத்தான நிலை யில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தலை யில் இருந்த குண்டு அகற்றப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மேற்படி துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை  நிரந்தரமாக மூட வேண்டுமென வலி யுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வழக்குத் தொடர்ந்தார். அதில், “புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி 11 வயது சிறுவர் மீது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார். அதுபோல சக்தி வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமை யிலான குழு அமைத்து, தவறுத லாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் மரணத்தை விசாரிக்கவும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கவும் வழக்கு விசா ரணையை சிபிஐக்கு மாற்றவும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி  மையத்தை மூடவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். வழக்கை வழக்கறிஞர்கள் பி.லெனின்குமார், எல்.அலாவுதீன் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “கடந்த டிசம்பர் 30ஆம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. மேலும், பயிற்சித் தளம் நிரந்தமாக மூடப்படும் என வும் அரசு சார்பில் உறுதி அளிக்கப் பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

எம்.சின்னத்துரை எம்எல்ஏ வரவேற்பு

இதுகுறித்து கருத்துத் தெரி வித்துள்ள கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, குண்டடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் புகழேந்தியை காப்பாற்று வதற்கு தீவிர முயற்சியை மேற்கொண் டோம். தஞ்சை மருத்துவக் கல்லூரி யில் சிறுவனுக்கு உயரிய சிகிச்சை  அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைக்கு உரியது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும் பத்திற்கு ரூபாய் ஒருகோடி நிவார ணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென சட்டமன்றத்தில் வலியுறுத்தப் பட்டதோடு, தமிழ்நாடு முதலமைச்சரி டமும் நேரில் மனுக்கொடுத்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவம் இப்பகுதியில் மீண்டும் தொடரக் கூடாது என்கிற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உடனடி யாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மேற்படி பயிற்சித் தளம் நிரந்தரமாக மூடப்படும் என நீதி மன்றத்தில் அரசு சார்பில் உறுதி  அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  வழக்கு முடித்து வைக்கப் பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை தொகுதி யின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் வரவேற்கிறேன். வழக்கை தொடுத்த கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர் மனுக்கும், வழக்கை நடத்திய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக் களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்குக் கிடைத்த வெற்றி யாகும். மேலும், இதரக் கோரிக்கை களையும் நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.   (ந.நி)