tamilnadu

‘பாஜக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

தென்காசி,ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம் திரு க்காட்டுப்பள்ளி அருகே தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவத் தில் கூடுதல் விபரங்கள், உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமை யிலான குழு இன்று (வெள்ளி) தஞ்சாவூருக்கு செல்கிறது. இக்குழுவில்  கட்சியின் கந்தர்வக் கோட்டை சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், தஞ்சா வூர் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகி யோர் இடம்பெறுகின்றனர்.

இதுகுறித்து தென்காசி யில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தஞ்சாவூர் தனியார் பள்ளி மாணவி தற்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த வேண்டும். பல நூறு ஆண்டு களாக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் அரும் பணியை செய்து வரு கின்றன. அங்கெல்லாம் எந்த மதமாற்றமும்  நிகழ வில்லை. தமிழக பாஜகவை  பொறுத்தமட்டில் அமைதி யான மாநிலத்தில் மதவெறி அரசியலை, மதமோதலை உருவாக்க முயற்சிக்கிறது. மதமாற்றம் செய்யப்பட்ட தாகக்கூறி வெளியிடப்பட்ட வீடியோவில் எந்த முகாந்திர மும் இருப்பதற்கு ஆதாரம் இல்லை. இப்பிரச்சனையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினார்.

 

;