மதுரை, அக்.26- இராமேஸ்வரத்தில் பாதாளச் சாக் கடை பணிக்கு 7 ஆண்டுகளில் ரூ.52 லட்சம் ஒதுக்கீடு செய்தும் 50 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை என்றும் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர், கோயில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இராமேஸ்வரத்தில் பழமை யான சிவன் கோவில் அமைந்துள்ளது. உள்ளே மற்றும் வெளியே 64 தீர்த்தங் கள் உள்ளது. இதில், அக்னி தீர்த்தம் கோயி லின் வெளியே உள்ள கடல் பகுதியை குறிக்கும். இராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தத்தில் குளிப்பதற்காக இந்தியா முழு வதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்க ணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால் கோவில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இராமேஸ் வரம் கடற்கரை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இராமேஸ்வரம் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்க ரூ.52.60 கோடி ஒதுக் கப்பட்டது. 7 வருடங்கள் ஆகியும் இது வரை 50 சதவீத பணிகள் நடைபெற்று, தற் போது பணிகளும் நடைபெறாமல் உள் ளது. இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.எனவே, இராமேஸ்வ ரம் கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க சம் பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை புத னன்று நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணப் பிரசாத் அமர்வு முன்பு நடை பெற்றது. மனுதாரர் தரப்பில் புகைப்படத்துடன் கூடிய ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதே தொடர்புடைய மற்றொரு வழக்கில் வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட் டுள்ளது. வங்காள விரிகுடா கடலில் சாக் கடை தண்ணீர் கலப்பதை தடுக்க பல் வேறு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள் ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் கூறுகை யில், இதனை சரி செய்ய யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து மக்கள் இராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல் கின்றனர். இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் சாக்கடை கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முறையான நடவ டிக்கை மேற்கொள்ளவில்லை. இந்தியா முழுவதும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வரு கின்றார்களா? என கேள்வி எழுப்பினார். உடனடி நடவடிக்கை மேற்கொண்டாலே இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று தெரிவித்தனர். இதே தொடர்புடைய மற்றொரு வழக் கில் வழக்கறிஞர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை முழுமையாக தாக் கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம் நீர் வளங்கள் துறை செயலர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், இராமேஸ்வரம் சிவன் கோயில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.