சென்னை, ஜூன் 12- பசுந்தாள் உர விதைகளை வழங்கி, ‘மண்ணுயிர் காத்து மன் னுயிர் காப்போம்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று தொடங்கி வைத்தார். மண்ணிலிருந்து சத்துக்களை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதால், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வரு கிறது. இதுதவிர, உற்பத்தி அதி கரிப்பிற்கு அதிக அளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற் றைப் பயன்படுத்துவதால் மண்ணி லுள்ள நுண்ணுயிர்களின் எண் ணிக்கை குறைந்து மண் வளமும், நலமும் குன்றியுள்ளது. எனவே, மண்வளத்தைப் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண் போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப் படுத்தவும் 2024-25ஆம் ஆண்டில் 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் யப்பட்டு, மொத்தம் 22 இனங்களில் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட் டம்” என்ற புதிய திட்டம் செயல் படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டது. தரம் மேம்பாடு இத்திட்டத்தின் கீழ், முதல் இன மாக பசுந்தாள் உர விதை விநியோ கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந் தாள் உரப் பயிர்கள் மூலம் மண் வளம் பேணிக்காக்கப்பட்டு, மண் ணில் வாழும் நுண்ணுயிரிகள் பாது காக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப் படும். இதனால் வேளாண் விளை பொருட்கள் தரம் மேம்பாட்டில், மக் களின் நலம் பேணிக் காணப்படும்.
2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் பயிர்!
மண்ணில் வளர்ந்து, மண் ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது “பசுந்தாளுரப் பயிர் கள்”. இதன் சாகுபடியை விவசாயி கள் இடத்தில் ஊக்குவித்திட ஆயக்கட்டு மற்றும் இறவைப் பாச னப் பகுதிகளில் முதற்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில் 20 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது. அதன்படி, விவசாயிகளுக்கு “பசுந்தாளுர விதைகளை” தமிழ் நாடு முதலமைச்சர் வழங்கி, முதல மைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர்.
இ-வாடகை செயலி
குறைந்த வாடகையில் விவ சாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள் மற்றும் வேளாண் கரு விகள் வழங்குதல் வேளாண்மை - உழவர் நலத்துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண் இயந்தி ரங்களுக்கு பெரிய அளவில் வர வேற்பு இருக்கும் காரணத்தால், அவற்றைக் கடைக்கோடியில் இருக்கும் சிற்றூருக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு அரசுக்கு இருப் பதால், விவசாயிகளின் கோரிக்கை யை ஏற்று, வட்டார அளவில் வேளாண் பணிகளைத் தங்குதடை யின்றி மேற்கொள்ள உதவும் பொருட்டு, டிராக்டர்கள், ரோட்ட வேட்டர்கள், இயந்திர கலப்பை கள், கரும்பு அறுவடை இயந்தி ரங்கள், நெல் அறுவடை இயந்திரங் கள் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் கொள் முதல் செய்யப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு துறையின் இ- வாடகை செயலியின் மூலம் குறைந்த வாடகைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ரூ. 10.25 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப் பட்ட 90 டிராக்டர்கள், 180 கொத்துக் கலப்பைகள் மற்றும் 90 ரோட்ட வேட்டர்களையும், அரசால் நிர்ண யம் செய்யப்பட்ட குறைந்த வாட கையில் விவசாயிகளின் பயன் பாட்டிற்காக வழங்கிடும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆர்.எஸ். ராஜகணபதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.