சென்னை,மார்ச் 14- தமிழ்ச் சமுதாய உயர்வுக்கு, பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறி ஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் வழங்கும் விழா செவ்வாயன்று (மார்ச் 15) சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகிக்கிறார். இந்த விழா வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவிக் கிறார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் சரவணன், தமிழ் வளர்ச்சி துறை, செய்தித் துறை மற்றும் அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பெரியார் விருது முத்த பத்திரிகையாளர் க. திருநாவுக்கரசு, திருவள்ளூர் விருது மு.மீனாட்சிசுந்தரம், அம்பேத்கர் விருது நீதிபதி சந்துரு, சிங்கார வேலர் விருது தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், காமராசர் விருது குமரி ஆனந்தன், பாரதியார் விருது பேச்சாளர் பாரதி கிருஷ் ணகுமார், இளங்கோவடிகள் விருது நெல்லைக் கண்ணன், உமறுப்புலவர் விருது தமிழ் இசை ஆய்வாளர் நா.மம்மது, மறைமலையடிகள் விருது பேச்சாளர் சுகி.சிவம், கம்பர் விருது பாரதி பாஸ்கர் உள்ளிட்டோ ருக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல் விருதுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.